Skip to main content

ஒரே நாளில் 14 வட்டாட்சியர்கள் இடமாற்றம்!

Published on 12/06/2022 | Edited on 12/06/2022

 

14 governors transferred in one day!

 

நாமக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியர் அந்தஸ்திலான 14 அலுவலர்கள் ஒரே நாளில் வெவ்வேறு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது, வருவாய்த்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நாமக்கல் மாவட்டத்தில், ஒரே பிரிவில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் அலுவலர்கள், புகாருக்கு உள்ளானவர்கள் என ஒரே நாளில் வட்டாட்சியர் அந்தஸ்திலான 14 அலுவலர்களை இடமாற்றம் செய்து ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார். 

 

நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் பிரகாசம், பரமத்தி வேலூர் சமூகப்பாதுகாப்புத் திட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சேந்தமங்கலம் வட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். பரமத்தி வேலூர் சமூகப் பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் செந்தில்குமார் சேந்தமங்கலத்துக்கு மாற்றப்பட்டார். 

 

அரசு கேபிள் டிவி நிறுவன துணை மேலாளர் சக்திவேல், பேரிடர் மேலாண்மை பிரிவுக்கும், திருச்செங்கோட்டில் சென்னை - கன்னியாகுமரி தொழில் தடத்தின் தனி வட்டாட்சியர் செல்வராஜ், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் துணை மேலாளராகவும் மாற்றப்பட்டனர். 

 

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) சுப்ரமணியன், சென்னை - கன்னியாகுமரி தொழில்தட திட்டத்தின் திருச்செங்கோடு தனி வட்டாட்சியராகவும், திருச்செங்கோடு நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர் சசிகலா குமாரபாளையம் நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியராகவும், பரமத்தி வேலூர் வட்டாட்சியர் கண்ணன் திருச்செங்கோடு நிலவரித்திட்ட தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டு உள்ளனர். 

 

சென்னை - கன்னியாகுமரி தொழில் தடத்திட்டத்தின் தனி வட்டாட்சியர் மாதேஸ்வரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியராகவும், பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் ராஜேஷ்கண்ணா சென்னை & கன்னியாகுமரி தொழில் தடத்திட்டத்தின் தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

 

குமாரபாளையம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சிவகுமார், பரமத்தி வேலூருக்கும், குமாரபாளையம் தனி வட்டாட்சியர் ஜானகி அதே வட்டத்தில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்திற்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளர் ராஜேஷ், நாமக்கல் நில எடுப்பு அலகின் தனி வட்டாட்சியராகவும், இங்கு பணியாற்றி வரும் லோகநாதன் டாஸ்மாக் உதவி மேலாளராகவும் மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பிறப்பித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொட்டாலே உதிர்ந்து விழும் கட்டிடம்; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை வேலூர் அரசு பழைய மருத்துவமனை, வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம், அப்துல்லாபுரத்தில் உள்ள சிறிய டைட்டில் பூங்கா கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அப்துல்லாபுரத்தில் கட்டப்பட்டு வரும் சிறிய டைட்டில் பூங்கா பணி கடந்த ஜனவரி மாதமே முடிக்கப்பட வேண்டிய நிலையில் ஒப்பந்ததாரர் முடிக்காததால் அவருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த எட்டு மாத காலங்களுக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 29 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட மகளிர் தங்கும் விடுதியை ஆய்வு மேற்கொண்ட போது கட்டிடம் முறையாக தரம் அற்று கட்டப்பட்டிருப்பதாகவும், ஒரு சில இடங்களில் தொடும்போதே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்தது.

Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

மேலும் கட்டிடத்தின் பகுதிகள் மிகுந்த விரிசலுடன் காணப்படுவதால் அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி ஆய்வு குழு ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு ஒதுக்கிய நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், இது மன்னிக்க முடியாத தவறு. இந்த கட்டிடம் வரும் காலத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், ஆகவே மாவட்ட ஆட்சியர், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து இந்த கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து இதன் தரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். அறிகையின் முடிவில் தரமற்று கட்டப்பட்டது தெரியவந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவரை பிளாக் லிஸ்டில் போட வேண்டும் என்றனர்.

மேலும் இக்கட்டிட கட்டுமான பணியை மேற்பார்வை செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் கட்டிடம், கூடுதல் ஆய்வகங்கள் வேண்டும் என்பதால் அரசு முன்னுரிமை அடிப்படையில் உரிய நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கிறது என்றும் கூறினார்.

Next Story

8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Tamil Nadu Govt order Transfer of 8 IAS officers

சமீப காலமாகப் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அண்மையில் தமிழ்நாடு முழுவதும் 6 மாவட்ட ஆட்சியர் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக ஏ. சுகந்தி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் உள்துறை இணைச் செயலாளராக எஸ்.பி. அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வணிகவரித்துறை இணை ஆணையராக (நிர்வாகம்) பி. ரத்தினசாமி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று இணை மேலாண் இயக்குநராக ஆனந்த் மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக வி. சரவணன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சி கூடுதல் ஆணையராக (சுகாதாரம்) வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட அதிகாரியாக வீர்பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.