தமிழகத்தில் ஆர்வமுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களை ஏதாவது ஒரு வகையில் சாதிக்கத் தூண்டி வருகின்றனர். இதில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ளபச்சலூர்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாநிலத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்துள்ளது.
அந்த வரிசையில் தான்ஆவணத்தான்கோட்டைஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களையும் சாதனை மாணவர்களாக மாற்றி வருகின்றனர் பள்ளி நிர்வாகத்தினர். நெகிழி இல்லாத பசுமைப் பள்ளியாக, ஐ.எஸ்.ஒ தரச்சான்று பெற்றபள்ளியாகதிகழ்கிறது. படிப்பு மட்டுமின்றி ஒழுக்கத்திலும், தனித்திறன்களிலும் சிறந்து விளங்கும் இந்தப்பள்ளிக்குத்தனியார்பள்ளிகளைப்போலத்தனி வாகன வசதியும் உள்ளது.
தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கல்வியாண்டை வரவேற்கும் விதமாக "திருக்குறள் தொடுப்போம்" என்ற சாதனை நிகழ்வை மாணவர்கள் நிகழ்த்தியுள்ளனர். புதியகல்வியாண்டைத்தமிழ் மூலம் வரவேற்கும் விதமாக இந்த திருக்குறள் தொடுப்போம் நிகழ்வைநடத்தியிருப்பதாகக்கூறும் ஆசிரியர்களும், மாணவர்களும், "அனைத்து வசதிகளுடன் உள்ள எங்கள் பள்ளியில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிகழ்வுகள் நடத்துவோம்.அதேபோலதான் இந்த கல்வியாண்டைவரவேற்கத்திருக்குறள் தொடுப்போம்நிகழ்வைச்சாதனை நிகழ்வாக நடத்தி இருக்கிறோம். அதாவதுஉலகப்பொதுமறையான திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களிலும் உள்ள 1330 திருக்குறளையும் ஒரு அதிகாரத்தை ஒரு மாணவர் என்ற அடிப்படையில் 133 அதிகாரத்தையும் 4- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை உள்ள 133 மாணவ, மாணவிகள் 3 நிமிடங்களில்எழுதிச்சாதித்து இருக்கிறார்கள். இதே போன்றநிகழ்வுகளைத்தொடர்ந்து நடத்துவோம். மேலும் 1,330 திருக்குறளையும் எழுதி ஒப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு திட்டத்தையும் அறிவித்திருக்கிறோம்" என்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சாதிப்பார்கள் என்பதற்கு இவர்கள் ஒரு எடுத்துக்காட்டு தான்.