dog

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் திவ்யபிரியா(வயது 25). தனியார் மருத்துவ கல்லூரி செவிலியரான இவர், ஆன்லைன் மூலமாக டெல்லியில் ரூ. 1.30 லட்சம் பணம் செலுத்தி வெளிநாட்டு நாய் ஓன்று ஆர்டர் செய்தார். 15 நாட்கள் ஆகியும் நாய் வராததால், சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்ட போது எந்தவித பதிலும் வரவில்லை.

Advertisment

இதனால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திவ்யபிரியா, பெரிய கடை காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment