Skip to main content

கேரளாவுக்கு கடத்த முயன்ற 13 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

Published on 10/07/2022 | Edited on 10/07/2022

 

13 tons of ration rice tried  to Kerala seized!

 

திண்டுக்கல்லில் கடத்த திட்டமிடப்பட்டிருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள கலிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கலைமகள் காலனியில் லாரி மற்றும் ஆம்னி வேன்கள், பிக்கப் வேன், டாடா ஏசி, ஆகிய வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தி கொண்டுவரப்பட்டு அங்குள்ள துரைராஜ் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்துள்ளனர். நேற்று ரோந்து பணிக்கு சென்ற சின்னாளபட்டி சார்பு ஆய்வாளர் கோமதி மற்றும் காவலர் ஸ்டாலின் ஆகியோர் லாரி மற்றும் வேன்கள் இருப்பதைப் பார்த்து அருகே சென்று ஆய்வு செய்தனர்.

 

13 tons of ration rice tried  to Kerala seized!

 

அப்போது அவர்கள் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்ல இருப்பதைக் கண்டுபிடித்தனர். உடனடியாக ரேஷன் அரிசி கடத்திய சின்னாளபட்டி பாரதி நகரைச் சேர்ந்த பெத்தனன் மகன் சதீஷ்குமார் மற்றும் லோடு மேன்கள் விஜி.சிங்கராஜ், மாரிமுத்து, ராஜா ஆகிய நால்வரையும் கைது செய்து சின்னாளபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து ரேஷன் அரிசியை ஏற்றி வந்த டாடா ஏசி வண்டி, ஒரு லாரி, மூன்று ஆம்னி வேன், ஒரு பிக்கப் வேன் உட்பட 6 வாகனங்களையும் குற்றவாளிகளையும் குடிமைப்பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

 

13 டன் ரேஷன் அரிசி கடத்தியது பிடிபட்டது குறித்து தகவல் தெரிந்தவுடன் மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் எம்.பாஸ்கரன், தலைமையில் மதுரை சரக துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன், திண்டுக்கல் அலகு காவல் ஆய்வாளர் கீதா, சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் செந்தில்குமார், பனையராஜா, தலைமைக் காவலர் உதயசூரியன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய வீட்டை பார்வையிட்டு அருகில் வசிப்பவர்களிடம் விசாரணை செய்தனர். சின்னாளபட்டி பகுதியில் 6 வாகனங்களுடன் 13 டன் ரேஷன் அரிசி கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.