Skip to main content

அயோடின் கலக்காத 13 டன் உப்பு பறிமுதல்... கோயம்பேட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு!

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

13 tons of non-iodinized salt seized... Food Safety Department officials conduct investigation

 

கோயம்பேட்டில் கடை ஒன்றில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு அயோடின் இல்லாத உப்பு பொட்டலங்களை டன் கணக்கில் பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பேசுகையில்,''கோயம்பேடு அங்காடியில் ஒரு குடோன் இருந்தது. அந்த குடோனில் நிறைய உப்புக்கள் விற்பனைக்கு வருகிறது என்று தகவல் வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் இன்னைக்கு அந்த குடோனில் சோதனை செய்தோம். அதில் உப்பு மூட்டைகள் நிறைய வைக்கப்பட்டிருந்தது. கேட்டதற்கு இதை நாங்கள் இண்டஸ்ட்ரியல் பர்பஸ்க்கு பயன்படுத்துகிறோம் அப்படின்னு சொல்றாங்க. ஆனால் சந்தேகத்தின் அடிப்படையில் நாங்கள் இங்கு இருக்கக்கூடிய மூட்டைகள் அனைத்தையும் சீஸ் பண்ணி வைத்துவிட்டு, உப்பை எங்கெல்லாம் சப்ளை செய்திருக்கிறார் என்பதற்கான பில்லை கேட்டிருக்கிறோம். அவர் பில்லை கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இப்போதைக்கு சுமார் 13 டன் உப்பை பறிமுதல் செய்திருக்கிறோம்.

 

அயோடின் இல்லாத உப்பு இது எனவே இந்த உப்பை சாதாரணமாக மனிதர்கள் உட்கொள்ளக்கூடாது. அயோடின் இல்லாத உப்பை விற்றதற்கான ப்ராப்பர் பில்லையும், விளக்கத்தையும் கொடுக்க வேண்டும். அதன் பிறகு தான் உப்பை நாங்கள் மீண்டும் எடுத்துக் கொண்டு போக அனுமதிப்போம். இந்த கடையில் யார் யாரெல்லாம் உப்பு வாங்கி இருக்கிறார்களோ அங்கெல்லாம் போய் விசாரிப்போம். உண்மையிலேயே இந்த உப்பு ட்ரீட்மென்ட்க்கு போகிறதா என்பதை நாங்கள் விசாரணை செய்வோம். இந்த உப்பு எங்கே எங்கே செல்கிறது என்பதை டிரேஸ் பண்ணிடலாம். அயோடின் கலந்த உப்புதான் மனிதர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி சட்டமே இயற்றி இருக்கிறார்கள். ஒரு கிலோ, இரண்டு கிலோ பாக்கெட்டில் தான் உப்பு இருக்க வேண்டும். அதன் மேலேயே அயோடின் உண்டு என போட்டிருக்க வேண்டும். உப்பளங்களில் உப்பு தயாரிக்கப்படும் பொழுது அயோடின் அளவு முப்பது பிபிஎம் இருக்க வேண்டும். (பார்ட்ஸ் பெர் மில்லியன்-PPM) கடைகளுக்கு வரும் பொழுது 15-ல் இருந்து 10 பிபிஎம் அளவு இருக்க வேண்டும். அந்த அளவுக்கு இருந்தால் தான் அந்த உப்பு அயோடின் கலந்த தரமான உப்பு என்று நாம் சொல்கிறோம். அயோடின் இல்லாத உப்பை அரசு தடை செய்துள்ளது. அயோடின் கலக்காத உப்புகளை யாராவது வீட்டிற்கு சமைப்பதற்காக வியாபாரம் செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
liquid nitrogen foodstuff; Food Safety Department action order

திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது என உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் திரவ நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள் விற்கக் கூடாது என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்தவொரு உணவு பொருள்களையும் கொடுக்கக் கூடாது எனவும், உணவு விடுதிகளில் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

'பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா நைட்ரஜன் பிஸ்கட்?-அதிர்ச்சியை ஏற்படுத்திய சிறுவனின் வீடியோ

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
'Will Nitrogen Biscuits be Banned Like Cotton Candy'- Boy's Shocking Video

நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன்  பிஸ்கட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நைட்ரஜன் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தான். இது தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் அந்தச் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

திரவ நைட்ரஜனை பிஸ்கட் உடன் சேர்த்து சாப்பிடும் பொழுது புகைப்பது போன்று வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும். இதை ஒரு ஃபன் ஆன உணவாக பல்வேறு பொது இடங்களில் மற்றும் சுற்றுலா தளங்களில் விற்கப்பட்டு வருகிறது. கோவை, திருச்சி, சென்னை தீவுத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கட் விற்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. திரவ நிலையில் மைனஸ் 196 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன் பிஸ்கட்டில் சேர்த்து பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் உணவுத்துறை வல்லுநர்கள்.

பொதுவாக உணவுப் பொருள்களை உறைய வைக்கவே ஆண்டாண்டு காலமாக திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கு திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது. ஒரே நொடியில் பொருட்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது. திரவ நைட்ரஜனை சிறிது திரவ நிலையில் எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் சென்று திரவ நைட்ரஜன் எவாபரேஷன் நடைபெற்று கடும் உடல் உபாதை ஏற்படுத்துவதோடு மரணத்திற்கும் இட்டுச் செல்லும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த அளவில் திரவ நைட்ரஜனை குறைவாக பயன்படுத்தும் பொழுது எந்த ஆபத்தும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியாகிய  இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அண்மையில் பஞ்சு மிட்டாயில் உள்ள நிறமி வேதிப்பொருள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனை அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத் தகுந்தது.