Skip to main content

10ஆம் வகுப்பு மாணவியைக் கர்ப்பமாக்கிய 12வது மாணவன்!

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

 12th student made the 10th class student pregnant

 

10ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 12வது மாணவனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது பள்ளி மாணவி. இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்,  தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் அவர் வீட்டில் இருந்து பெற்றோருக்கு உதவியாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவியின் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.  அடிக்கடி வயிறு வலிப்பதாக சொல்லி இருக்கிறார்.  நேற்று முன்தினம் சிறுமிக்கு திடீரென தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

 

வலி தாங்க முடியாமல் சிறுமி  துடித்தார். உடனே அவரது பெற்றோர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.  சிறுமியைப் பரிசோதனை செய்த டாக்டர் நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார். அதான் தற்போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் சிறுமிக்கு குழந்தை பிறந்து விடும் என்று கூறியுள்ளார். இதைகேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்த நிலையில்  டாக்டர் கூறியபடி சில மணி நேரத்தில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு சிறுமியிடம் அது குறித்து பெற்றோர் விசாரணை செய்தனர். அப்போது சிறுமி அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன்னிடம் நெருக்கமாக பழகி ஆசை வார்த்தை கூறி சில முறை தம்மிடம் தனிமையில் இருந்து வந்ததாகவும் அதன் காரணமாக தனக்கு குழந்தை உருவாகி உள்ளது. இது குறித்து எனக்கு எந்த விபரமும் தெரியவில்லை என்று சிறுமி கூறி உள்ளார். 

 

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரி பேரில் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த மாணவன் மீது போக்சோ சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து மாணவனை தீவிரமாக தேடி வருகிறார்கள். மகள் கர்ப்பம் அடைந்திருப்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் பெற்றோர்கள் இருந்திருக்கிறார்களே என்றும்; பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த  12 ஆம் வகுப்பு மாணவனின் செயலும் அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.