Skip to main content

தேர்வு பயத்தால் தூக்கிட்ட பிளஸ் 2 மாணவன்!- பெற்றோரின் எதிர்பார்ப்பைச் சுட்டிக்காட்டிய கடிதம்! 

Published on 05/05/2022 | Edited on 05/05/2022

 

12th student incident in virudhunagar district wrote a letter

 

நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும் சரி, சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்கும் சரி, தேர்வு வந்துவிட்டால், அதுவரையிலும் இல்லாத பயம் தேடிவந்து ஒட்டிக்கொள்கிறது. கேள்விக்கு பதில் எழுதுபவர்களாக இல்லாமல், கேள்விகளைக் கேட்பவர்களாக மாணவர்கள் இருந்தால், தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆற்றல், தானாகவே வந்துவிடும். இந்தப் புரிதலை, ஆசிரியர்களும் பெற்றோரும்  மாணவன் தினேஷுக்கு ஏற்படுத்தத் தவறிவிட்ட நிலையில், பிளஸ் 2 தேர்வுக்கு முதல் நாள், அம்மாவுடைய சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். 

 

விருதுநகர் மாவட்டம், சூலக்கரையைச் சேர்ந்த முருகேசன்- ஈஸ்வரி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். மூத்தமகன் கல்லூரியில் படிக்கிறார். இளையமகன் தினேஷ்,  ராமசாமி ராஜா நகரிலுள்ள ராம்கோ வித்யாலயா (CBSE) பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்தான். மே 5- ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவேண்டிய நிலையில், கடும் மனஉளைச்சலில் இருந்திருக்கிறான். இதனையறியாத அவன் பெற்றோர், கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வெளியூர் சென்றுவிட்டனர். 

 

தாத்தா வேலுச்சாமி மட்டும் சூலக்கரை வீட்டில் இருந்திருக்கிறார். தாத்தா வீட்டிலிருந்து கிளம்பிய நேரம் பார்த்து, தனது அறையைப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டு உயிரைவிட்டுள்ளான். தகவலறிந்த சூலக்கரை போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். 

 

என் சாவுக்கு யாரும் காரணமில்லை என்று மாணவன் தினேஷ் எழுதியுள்ளதாகச் சொல்லப்படும் கடிதத்தில், படிப்பில் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத நிலையில், தற்கொலை முடிவெடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளானாம்.  

 

மாணவன் தினேஷ் தற்கொலை குறித்து வேதனைப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர், “பெற்றோர் மற்றும் பள்ளியின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் இயந்திரங்களாகவே மாணவர்கள் இயக்கப்படுகின்றனர்.  பள்ளியில் படிக்கும் பாடங்கள் என்பது, தினசரி வாழ்க்கையோடு தொடர்புடைய ஒன்று என்பதை மாணவர்களுக்குப் புரியும்படி செய்தால், கற்றலில் ஆர்வம் ஏற்படுவதோடு, கல்வியைச் சுமையாகக் கருதாமல் சுவையானதாக ஆக்கிக்கொள்ள முடியும். பள்ளியில் மாணவர்களுக்கு ஏற்படும் அனுபவம், வாழ்க்கையை இனிமையாக்குவதற்குப் பதிலாக, கசப்பாக்கிவிடுகிறது. 

 

எதற்கும் தற்கொலை ஒரு தீர்வாகாது என்பதை மாணவ சமுதாயத்துக்கு நம்மால் ஏன் உணர்த்த முடியவில்லை? பாடநூல்களில் உள்ள கருத்துகளைக் குருட்டு மனப்பாடம் செய்து, தேர்வில் அப்படியே எழுதும் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதென்பது, சாத்தியப்படாமலே இருந்துவருகிறது. இந்த மனப்பாட யுக்தியானது, கருத்துகளைப் புரிந்துகொள்ளாமல், மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கிறது. இதற்கென்றே, குருட்டு மனப்பாடத்திலிருந்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்வதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 10-ஆம் தேதி,   குருட்டு மனப்பாடம் எதிர்க்கும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

 

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை பழமொழி வாயிலாகவே முன்னோர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளனர். ஆனாலும், இன்றைய தலைமுறையினருக்கு அதனை உணர்த்த நாம் தவறிவிட்டோம்.” என்றார் ஆதங்கத்துடன்.   

 

மனப்பாடத்தை விடுத்து, சரியான கற்றல் முறைக்கு மாறுவது என்றோ? 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

“எடப்பாடி அண்ணன் எப்பவும் அழகா சிரிப்பாரு” - விஜயபிரபாகரன் ஐஸ் மழை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Edappadi Annan will always have a beautiful smile Vijaya Prabhakaran Ice rain

சிவகாசியில் அ.தி.மு.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் விருதுநகர் பாரளுமன்றத் தொகுதிக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (28.03.2024) நடந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றியனார். இந்தக் கூட்டத்தில், தே.மு.தி.க. வேட்பாளர் விஜயபிரபாகரன் பேசுகையில், “இவ்ளோ சீக்கிரம் நான் அரசியலுக்கு வருவேன்னு எனக்குத் தெரியாது. இது காலத்தின் கட்டாயம். எங்க அப்பா கேப்டன் விஜயகாந்த் விருதுநகர்ல பிறந்து மதுரைக்கு போய்,  இன்னைக்கு சென்னைல இருக்காரு. கேப்டன் இறந்ததுக்கு அப்புறம் ஒரு நாள் நான் மதுரைக்கு வந்தேன். அன்னைக்கு மதுரைல இருந்தப்ப.. எனக்குள்ள ஏதோ ஒரு பந்தம்.. எனக்கும் மதுரைக்கும் விருதுநகர்க்கும் ஒரு பந்தம் விட்டுப்போச்சோன்னு அன்னைக்கு ரொம்ப ஃபீல் பண்ணி அழுதுட்டு வந்த மாதிரி இருந்துச்சு.

அப்போ இது யாரோட ஆசை,  கேப்டனோட ஆசையான்னு தெரியல. நான் சென்னைல இருந்து மதுரைக்கு வந்து இன்னைக்கு விருதுநகர்க்கு வந்து போட்டியிடுறேன். நிச்சயம் இந்த பந்தம் என்னைக்கும் விட்டுப் போகாதுன்னு. ஆண்டவர் சொல்லிருக்காரு போல. நிறைய பேர் சொன்னாங்க. விஜயபிரபாகரன் சென்னைல இருக்காரு. விருதுநகர்ல எதுக்கு வந்து போட்டியிடுறாருன்னு?. பூர்வீகமா இது எங்களோட மண்ணு. இது எங்க தாத்தாவோட மண்ணு. ராமானுஜபுரத்துலதான் எங்க தாத்தா இருந்தாரு. எங்க அப்பா பிறந்தாரு. இங்க இருக்கிற எல்லாரும் எங்க அங்காளி, பங்காளி. எல்லாரும் எங்க சொந்தகாரங்கதான். உங்க எல்லாரையும் இங்க சந்திக்கிறதுல ரொம்ப சந்தோசம். ரொம்பப்  பெருமையா நினைக்கிறேன்.

விஜயகாந்த் உங்களுக்காகத்தான் என்னை விட்டுச் சென்றுருக்காருன்னு. என் பணி முழுவதும் உங்களுக்காக மட்டும்தான். ஏதோ விஜயகாந்த் பையன் சென்னைல இருக்கான், வர மாட்டான் அப்படி எல்லாம் நினைக்காதீங்க. எங்க அப்பா சின்ன வயசுல இருந்து சராசரியா ஒரு பையன் எப்படி கஷ்டப்படனும், 3 வேளை சாப்பாடு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்ன்னு சொல்லி சொல்லி வளர்த்திருக்காரு. நிச்சயம் அதே மாதிரிதான் எங்கள் பணி தொடரும். இன்னைக்கு முதல் முறையா விருதுநகர் தொகுதிக்குள்ள வரும்போது, அ.தி.மு.க. எல்லா தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திச்சேன். எனக்கு மனப்பூர்வமா ரொம்ப சந்தோசம் உங்களை எல்லாம் சந்திச்சதுல. ஏன்னா எடப்பாடி அண்ணே எப்பவும் அழகா சிரிப்பாரு. தலைமை அழகா சிரிச்சாதான், கீழ இருக்கிற தொண்டர்கள் வரைக்கும் சிரிப்பாங்க. அதேமாதிரி அ.தி.மு.க.வுல எல்லாருமே என்னை அரவணைச்சி உங்க வீட்டுப் பிள்ளையா என்ன நீங்க பார்த்துக்கிறீங்க.

எனக்கு உள்ள வரும் போது தே.மு.தி.க., அ.தி.மு.க. எந்த வேறுபாடும் தெரியல. நாம எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்கோம். அதுனால தான் எம்.ஜி.ஆர், கருப்பு எம்.ஜி.ஆர் பேர் வந்ததான்னு கூட தெரியல. இனி என்னோட பிரச்சாரம் ஆரம்பிக்கிற எல்லா ஊருக்கும் வந்து நான் டீடெய்லா பேசுறேன். இன்னைக்கு விருதுநகர் மாவட்டம் முழுக்க பட்டாசு தொழிலாளர்கள்தான் ஜாஸ்தி. இங்க சிவகாசில பேசுறோம். எங்க பெரியப்பா சொன்னாரு, 2018இல் விஜயகாந்த் இதே இடத்துல பேசிட்டு போனாருன்னு. அன்னைக்கு அவர் விட்டுட்டுப் போன அதே இடத்துல, அதே மாதிரி நான் இன்னைக்கு ஒரு வேட்பாளாரா உங்க முன்னாடி பேசும் போது, ரொம்ப சந்தோஷம் அடையறேன்.

இன்னைக்கு சிவகாசி என்பது குட்டி ஜப்பான்ன்னு சொல்லுவாங்க. இந்த வார்த்தை, தாயகம் படத்துல கேப்டன் தீவிரவாதிகளை ஒரு பாம் பிளாஸ்ட் பண்ணும்போது சொல்லுவாரு. நான் சின்ன ஜப்பான்ல இருந்து எல்லா பொருளும் கொண்டு வந்துருக்கேன்னு. அந்த தீவிரவாதிகள் கிட்ட டயலாக் பேசிருப்பாரு தாயகம் படத்துல. அதுனால அந்த வார்த்தை தெரியும், சிவகாசிதான் சின்ன ஜப்பான்ன்னு. ஏன் அந்த டயலாக் அவ்ளோ ஸ்டிராங்கா இருக்குன்னா. அவ்ளோ திறமைசாலிகள், வல்லுநர்கள் இங்க சிவகாசி பட்டாசு தொழில்ல இருக்கிறாங்க. அதுக்காகத்தான் இத சின்ன ஜப்பான்னு சொல்லிட்டு இருக்காங்க. இன்னைக்கு சைனா  ப்ராடக்ட் எல்லாம் உள்ள வருதுன்னு, நம்மளோட வேலைகள் வெளிய வரலன்னு, உங்களோட மனக்குமுறல் எல்லாத்துக்குமே தீர்வுகாண முடியும். அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணியின் முரசு சின்னத்துக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நிச்சயம் விஜயகாந்த் மகனா, எடப்பாடி அண்ணன் ஆசைப்பட்ட வேட்பாளரா, நிச்சயம் டெல்லில போய் உங்களுக்காக நான் போராடுவேன். உங்களுக்காக நான் குரல் கொடுப்பேன்” எனப் பேசி சைகைகளால் முரசு கொட்டினார் விஜயபிரபாகரன்.