Skip to main content

தொடங்கியது 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு..! (படங்கள்)

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று (16.04.2021) தொடங்கியது. இதனை மாவட்டக் கல்வி அலுவலர் சண்முகவேல் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மேலும் மாணவிகளிடம் கரோனா பாதுகாப்பு குறித்து விசாரித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு; பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
School Education Department Notification for Attention Class 12 candidates

தமிழ்நாடு பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதே போல், 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 4ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 26ஆம் தேர்வு தொடங்கப்பட்டு ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பிப்ரவரி 20ஆம் தேதி (இன்று) முதல் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி, இன்று பிற்பகல் முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது.

மேலும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.