ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழகத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான கணித வினாத்தாள் கசிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. நாளை காலை கணித தேர்வு நடைபெற இருந்த நிலையில், அந்த வினாத்தாள் திருவண்ணாமலையில் வாட்சாப் வாயிலாக சிலர் கசியவிட்டுள்ளனர். மேலும் 10ம் வகுப்பு அறிவியல் வினாத்தாளும் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Show comments