Skip to main content

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 120 கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு! 

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

120 Grama member swaiting at Tirupati District Collector office

 

திருப்பத்தூர் மாவட்டம், மட்றப்பள்ளி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக சரண்யா என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீரென ஆய்வு செய்த போது கிராம கணக்கு புத்தகம் பராமரிக்காமல் இருந்துள்ளது. அ. பதிவேடு, பட்டா, சிட்டா புத்தகங்கள் போன்றவையும் சரியாக பராமரிக்கவில்லையாம். இதுக்குறித்து கேள்வி எழுப்பியபோது சரியாக பதிலளிக்கவில்லையாம். இதனால் கிராம நிர்வாக அலுவலரான சரண்யாவை பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


இது தவறானது எனச் சொல்லியும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட சரண்யாவிற்கு மீண்டும் பணி வழங்கக்கோரி திருப்பத்தூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் 120க்கும் மேற்பட்டோர் ஏப்ரல் 23ஆம் தேதி மதியம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இல்லாத காரணத்தால் கடந்த 3 மணி நேரமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள்  காத்திருக்கின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாற்றுத்திறனாளி சிறுவனை தனியார் பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநர்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
conductor refused to board the differently-abled son in the private bus

திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குப்தா. இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 14 வயதில் மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இவரை இன்று இவருடைய அம்மா வெண்ணிலா திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் விசமங்கலத்தில் உள்ள வீட்டிற்குச் செல்வதற்காக திருவண்ணாமலை செல்லும் தனியார் பேருந்தில் மாற்றுத்திறனாளியான மகனை ஏற்றி சீட்டில் உட்கார வைத்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளி மகனைத் தனியார் பேருந்தின் நடத்துநர் கீழே இறக்கி விட்டுள்ளார். 

ஆத்திரம் அடைந்த அவரின் தாயார் வெண்ணிலா மற்றொரு பேருந்தில் விசமங்கலம் பகுதிக்கு வந்து சாலையில் கல்லை வைத்து கையில் பெட்ரோல் கேனுடன் திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

conductor refused to board the differently-abled son in the private bus

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆய்வாளர் ரேகா மதி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அறுவடைக்கு தயாராக இருந்த 3 ஏக்கர் கரும்புப்பயிர் தீப்பிடித்து எரிந்து நாசம்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
3 acres of sugarcane crop which was ready for harvest was destroyed by fire

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட கல்லரைபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி காதர்பாஷா என்பவர் தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு பயிர் பயிரிடப்பட்டிருந்த நிலையில் திடீரென கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டு மலமலவென தீப்பற்றி எரிந்துள்ளது.

இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து 45 நிமிடம் கழித்து தீயணைப்பு வாகனம் விவசாய நிலத்திற்கு சென்று ஐந்து நிமிடங்கள் தண்ணீரை பீச்சு அடித்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இல்லாததால் தீயை அணைக்க இயலாமல் தீயணைப்பு துறையினர் முயற்சியை தொடர தண்ணீரை மீண்டும் நிரப்பி வருவதற்குள் மூன்று ஏக்கர் கரும்பு தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த  பயிர்கள் அனைத்தும் எரிந்து நாசம் ஆகி உள்ளது.

விவசாயி காதர் பாஷா தனது குடும்பத்துடன் கொழுந்து விட்டு எரியும் கரும்பு தோட்டத்தில் தீயை அணைக்கக் கடும் முயற்சி செய்தும் பலனளிக்காமல் போகவே தீயை அணைக்க முடியவில்லையே என அவர் கதறி அழும் காட்சிகள் மனதை உருக்குவதாக உள்ளது . கரும்பு பயிர் முழுவதுமாக விளைந்து கரும்பு ஆலைக்கு கட்டிங் செய்து கொண்டு செல்லக் கடந்த 20 நாட்களாக முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்து கரும்பு நாசமானது அந்த விவசாயியையும் அவர் குடுபத்தையும் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.