Skip to main content

வடகாடு, நல்லாண்டார்கொல்லையில் ஹைட்ரோ கார்ப்பனுக்கு எதிராக போராடிய 12 பேருக்கு சம்மன் 

Published on 07/05/2018 | Edited on 07/05/2018
vadakadu

 

   வடகாடு, நல்லாண்டார்கொல்லை கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடி விவசாயிகள் 12 பேருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் பரபரப்பு எற்பட்டுள்ளது. 

 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு கர்நாடகாவைச் சேர்ந்த ஜெம் லேபரெட்டரிஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது தொடர்பாக நெடுவாசலில் விவசாயிகள் போராட்டம் தொடங்கிய நிலையில் வடகாடு கல்லிக்கொல்லை கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்ட எண்ணெய் ஆய்குழாய் கிணற்றை அகற்ற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வடகாடு கடைவீதியில் பந்தல் அமைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். .இந்த நிலையில் 21 நாட்கள் போராட்டம் நடந்த நிலையில் மாவட்ட கலெக்டர் கணேஷ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், போலிசார் போராட்டக்காரர்களிடம் சமாதன பேச்சுவார்த்தை நடத்தி ஒ.என்.ஜி.சி ஆழ்குழாய் கிணற்கை 6 மாதகாலத்திற்குள் அகற்றி கொடுப்பதாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்றும் எழுதிக் கொடுத்த பிறகு போராட்டம் நிறுத்திக் கொள்ளப்பட்டது. 

 

    அதே போல நல்லாண்டார்கொல்லை கிராம மக்களின் போராட்டம் தொடர்ந்து 47 நாட்கள் நடந்த நிலையில் அங்கும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட கலெக்டர் கணேஷ் 6 மாதத்தில் ஆழ்குழாய் கிணற்றை அகற்றி கொடுப்பதாக உறுதி அளித்தார். அதனால் அங்கும் போராட்டம் கைவிடப்பட்டது.

 

    இந்த நிலையில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராடியதாக கீரமங்கலத்தில் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிர்வரும் 15 ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் வந்துள்ளது. 

 

    அதே போல வடகாடு கிராமத்தில் கடந்த ஆண்டு மார்ச் 12 ந் தேதி ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டு போக்கவரத்துக்கும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை அடைத்து கூட்டமாக நின்றதாக.. வடகாடு சப்இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் ராஜகுமாரன், போத்தியப்பன், விஜய்ஆனந்த், சுப்பிரமணியன், சுதாகர், சரவணன், செல்வகுமார், முரளி, ராஜாராம் ஆகிய 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 8 பேரும் 15 ந் தேதி ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த 8 பேருக்கும் இன்னும் சம்மன் கிடைக்கவில்லை என்று. 


    அதே போல நல்லாண்டார்கொல்லையில் போராட்டம் நடத்தியவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டதாக வடகாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அழகர், மற்றொரு அழகர், வினோத் உள்பட 4 பேருக்கும் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கும் சம்மன் கிடைக்கவில்லை. 

 

    ஹைட்ரோ கார்ப்பனுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்கு பதிவு இருக்காது என்று சொன்ன மாவட்ட நிர்வாகம், காவல் துறை தற்போது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளதாக கூறுவது விவசாயம் காக்க போராடியவர்களை வேதனைப்பட வைத்துள்ளது என்கின்றனர் விவசாயிகள். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

நிலத்தடி நீர் குறித்த ஆய்வுக்கு வந்த டெல்லி அதிகாரிகள்; ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு வந்ததாக மக்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

 

    இந்தியாவில் நிலத்தடி நீர் குறைந்துள்ள பகுதிகளை கண்டறிந்து மீண்டும் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் ஜல்சக்தி அபியான்  என்ற திட்டத்தின் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

v


தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீரமங்கலம், ஆலங்குடி சுற்றியுள்ள வருவாய் கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் கடந்த காலங்களை விட குறைந்துள்ளதால் எதனால் நிலத்தடி நீர் குறைந்துள்ளது மீண்டும் நிலத்தடி நீரை பூமிக்குள் செலுத்தி எப்படி பாதுகாப்பது என்பது பற்றியும், நிலத்தடி நீரை சேமிக்க அரசுகள் செய்துள்ள பணிகள் குறித்து ஆய்வுகள் செய்ய மத்திய உணவு, பொது விநியோகத்துறை பொருளாதார ஆலோசகர் மற்றும் இணைச் செயலாளர் மணிஷா சென்ஷர்மா,  மத்திய உணவு பொது விநியோகத்துறை துணைச் செயலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் ஆலிஸ் ரோஸ்லின் டேடே, மத்திய நீர்  வாரிய தொழில்நுட்ப அலுவலர் சந்தியா யாதவ் ஆகியோர் அடங்கிய குழுவினர் வந்துள்ளனர். 

 


வடகாடு சேர்வைகாரன்பட்டி கிராமத்தில் உள்ள மழைத் தண்ணீர் செல்லும் வரத்து வாய்ககால் மற்றும் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதை மத்திய ஆய்வுக்குழுவினருடன் மாவட்டக் கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதே போல கஜா புயலில் மரங்கள் சாய்ந்ததால் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டனர். தொடர்ந்து லெட்சுமிநரசிம்மபுரம் ஊராட்சியில் உள்ள தடியமனை கிராமத்தில் வடிவழகன் குளத்தில் தேசிய வேலை உறுதி திட்டத்தில் ரூ. 1.65 லட்சத்தில் கட்டப்படுள்ள தடுப்பணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 


இது குறித்து ஆய்வுக்குழுவினர் கூறும் போது.. கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்திருக்கிறது. அதனை மேம்படுத்துவது குறித்து ஆய்வுகள் செய்து வருகிறோம். தற்போது நிலத்தடி நீரை சேமிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தடுப்பணைகளை பார்வையிட்டுள்ளோம். மேலும் ஆய்வுகள் செய்யப்பட்ட பிறகு மேலும் நிலத்தடி நீரை சேமிக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்பட உள்ளது என்றனர்.

 

    மத்திய ஆய்வுக்குழுவினர் திடீரென வடகாடு, தடியமனை ஆகிய கிராமங்களுக்குள் சென்று ஆங்கிலத்தில் பேசிக் கொண்ட போது அப்பகுதியில் நின்ற சிலர் எதற்காக வந்துள்ளனர் என்பது பற்றி தெரியாமல் ஏதோ புதிய திட்டங்கள் பற்றி ஆய்வு செய்ய வந்துவிட்டதாக கூறி ஆய்வுக்குழுவினரிடம் கேட்டனர். மேலும் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்காக டெல்லியிலிருந்து குPவினர் வந்துவிட்டனரோ என்று அப்பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்பினார்கள். அதன் பிறகு அவர்களுடன் வந்த மாவட்ட அதிகாரிகள் நீர்நிலை பற்றி ஆய்வு என்று விளக்கம் கொடுத்து சமாதானம் செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது.
    மேலும் இதுக்கு முன்னால புயலால் பாதிக்கப்பட்ட போது இதே போல மத்திய குழு வந்து பார்த்தார்களே எங்களுக்கு என்ன செஞ்சாங்க. நடப்பு பட்ஜெட்ல கூட எதுவும் அறிவிக்கல. இப்ப நிலத்தடி நீரை சேமிக்க குழு வந்திருக்கு என்ற கேள்வி எழுப்பினார்கள் மக்கள். 
            
 

Next Story

பிரமாண்ட வழுக்கு மரம் ஏறும் போட்டி- பனங்குளம் இளைஞர்கள் வெற்றி

Published on 19/01/2019 | Edited on 19/01/2019
vv

 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டாலும் ஒவ்வொரு கிராமத்திலும் வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். சுமார் 30 அடி முதல் 40 அடி உயரத்தில் வழுக்கு மரங்கள் தயாரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு புயலால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் பல இடங்களில் இந்த போட்டிகள் நடத்தப்படவில்லை. 


இந்த நிலையில் வடகாடு பரமநகரில் நண்பர்கள் குழு சார்பில்  வழுக்கு மரம் ஏறும்போட்டி நடைபெற்றது. சுமார் 55 அடி உயரமுள்ள மரம் நடப்பட்டு அதன் மீது வழுக்கும் தன்மைக்காக கிரீஸ்,  10 லிட்டர் எண்ணெய் பூசப்பட்டது. மரத்தின் உச்சியில் பண முடிப்பு மற்றும் வாழைப்பழ தார், துண்டு வைக்கப்பட்டு தூக்கி நிறுத்தப்பட்டிருந்தது. இப்போட்டிக்கு வடகாடு, பனங்குளம், பாண்டிக்குடி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட  அணியினர் முன்பதிவு செய்திருந்தனர் .


     தொடக்கத்தில் தலா 6 பேர் கொண்ட குழுவினர் மரத்தில்  ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டது. சில சுற்றுகளுக்கு பிறகு எண்ணிக்கையை 8 ஆகவும், இறுதியில்  10 பேர் ஏறவும் அனுமதிக்கப்பட்டனர். இளைஞர்கள் ஏறுவதும் சரிவதுமாகவே இருந்தனர். போட்டி தொடங்கி சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகு பனங்குளம் அணியினர் ஒருவர் மீது ஒருவராக ஏறி இலக்கை தொட்டு பண முடிப்பை எடுத்தனர்.  இவர்களுக்கு பரிசாக ரூ. 21 ஆயிரத்தி 331 ரொக்கப் பரிசும் சுமார் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன், தமிழக மக்கள் கட்சித் தலைவர் கே.கே.செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி எற்பாடுகளை வடகாடு பரமநகர் நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.