Skip to main content

12 அம்ச கோரிக்கை! மத்திய அமைச்சரிடம் செந்தில்பாலாஜி வலியுறுத்தல்! 

Published on 16/12/2021 | Edited on 17/12/2021

 

12 feature request! Senthilpology urges Union Minister!

 

தமிழக மின்சார வாரியத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பதற்காக டெல்லி சென்ற தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ஒன்றிய அரசின் அமைச்சர் ஆர்.கே.சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த சந்திப்பின் போது, தமிழக மின்வாரியத்தின் சேர்மன் ராஜேஷ்லக்கானி ஐ.ஏ.எஸ். மற்றும் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக இயக்குநர் சிவலிங்கராஜன் ஆகியோர் உடனிருந்தனர். 

 

மத்திய அமைச்சருடனான அந்த சந்திப்பில் 12 அம்ச கோரிக்கைகளை மின்னிறுத்தி அதற்கு தீர்வு காணுமாறு ஆர்.கே.சிங்கை வலியுறுத்தியிருக்கிறார் செந்தில்பாலாஜி. குறிப்பாக, 2003 ஆண்டில் கொண்டுவரப்பட்ட மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திற்கு 237.63 லட்சம் டன் நிலக்கரியை ஒன்றிய அரசு அனுப்ப வேண்டிய நிலையில், வருசத்துக்கு வெறும் 171 .10 லட்சம் டன் நிலக்கரி மட்டுமே வழங்கப்படுகிறது. அதனால், உரிய அளவில் மின்சாரத்தை பெறும் வகையில், நாளொன்றுக்கு 10,000 டன் நிலக்கரியை வழங்க வேண்டும். 

 

ஒரிசா மாநிலம், சந்திரபிலாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்திலிருந்து தமிழகத்திற்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்ய 30.03.2016-ல் ஒப்பந்தம் போடப்பட்டும், 5 ஆண்டுகள் கடந்தும் அங்கு நிலக்கரி உற்பத்தி துவக்கப்படாததால் அந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும். ஒன்றிய அரசின் நிதி நிறுவனங்களான பிஎஃப்சி, ஆர்இசி, ஐஆர்இடிஏ ஆகியவையிலிருந்து பெறப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் 9.50 முதல் 12.65 சதவீதமாக இருப்பதை ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை 8.50 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும்.

 

ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி.திட்டத்தில் பார்ட் ஏ-வில் உள்ள வேலைகள் முடிக்கப்படாததால் கடனாக வழங்கப்பட்டுள்ள 1330.39 கோடியை மானியமாக மாற்றித்தர வேண்டும். அதேபோல, மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்திற்காக 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட 8647 கோடி ரூபாய் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற போதுமானதாக இல்லையென்பதால் மானியத் தொகையை 12,000 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும்.

 

ஒன்றிய அரசின் மின்விநியோக நிறுவனத்தால் வசூலிக்கப்படும் 1 யூனிட்டிற்கான சேவை கட்டணம் 7 பைசாவை 1 பைசாவாக குறைத்து நிர்ணயித்துத்தர வேண்டும். ரைகார்-புகளூர்-திருச்சூர் உயர் மின்னழுத்த மின்வழிப்பாதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் இந்த பாதையிலுள்ள அனைத்து பயனாளர்களும் பயனடையும் வகையில் 720 கோடியாக இருக்கும் நிதிச்சுமையை 216 கோடி வரை குறைத்து, 504 கோடி ரூபாயை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

ஒன்றிய அரசின் மின்விநியோக கழகத்தின் மூலம் கொள்முதல் செய்து வழங்க வேண்டிய 1100 மெகாவாட் மின்சாரத்தை 5 ஆண்டுகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான மின்பாதையை உபயோகப்படுத்துவதற்காக செலுத்த வேண்டிய தொகையிலுள்ள கணக்கீடு குறைகளை நிவர்த்தி செய்து டேன்ஜெட்கோவிற்கு மாதந்தோறும் ஏற்படும் கூடுதல் செலவான 48 கோடியை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மின்கொள்முதலுக்கு உத்தரவாதமாக, வங்கி உறுதி கடிதம் வழங்க வேண்டுமென்கிற உத்தரவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்சனைகளை விவாதித்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் ஒன்றிய அமைச்சர் ஆர்.கே.சிங்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர்.