Skip to main content

தேர்வால் ஏற்பட்ட விரக்தி; பள்ளி மாணவியின் விபரீத முடிவு!

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

11th standard class student lost their life due to not writing the exam properly

 

சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவிகள் எந்த ஒரு காரணத்திற்காகவும் எதைப் பற்றியும் சிந்திக்காமல் மாடியில் இருந்து குதித்துவிடும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி இருப்பது பெற்றோர்களை ரொம்பவே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த ஆடிட்டர் செல்வக்குமாருக்கு மனைவி மற்றும் 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் குப்பகோணத்தில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில் இளைய மகள் தரண்யா (17) அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் +1 பயோ மேத்ஸ் படிக்கிறார். மகனும் அதே பள்ளியில் சிபிஎஸ்இ 3ம் வகுப்பு படிக்கிறார்.

 

+1 மாணவி தரண்யா கடந்த 20ந் தேதி நடந்த இயற்பியல் பாடம் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்து தேர்வு சரியாக எழுதவில்லை என்று விரக்தியில் பேசியவரை பெற்றோர் ஆறுதல் கூறி அமைதியாக்கி உள்ளனர். ஆனால், அந்த மன உளைச்சலில் இருந்து மீளாத நிலையிலேயே நாளை வெள்ளிக்கிழமை நடக்கும் உயிரியல் பாடங்களை படித்துக் கொண்டிருந்தவர் முதல் மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார்.

 

சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்து தலையில் அடிபட்டு மயங்கிக் கிடந்த தரண்யாவை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துவிட்டிருந்தார். மாணவியின் இந்த விபரீத முடிவால் ஊரே சோகத்தில் உள்ளது. உறவினர்கள் கதறித் துடிக்கின்றனர். சம்பவம் குறித்து கீரமங்கலம் போலிசார் விசாரணை செய்து வரும் நிலையில், மாணவியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.