1.15 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு-தமிழக மின்துறை தகவல்

1.15 Crore Electricity Connections Linked to Aadhaar-Tamil Electricity Department Information

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணை வேண்டும் என தமிழக அரசின் மின்துறை தெரிவித்திருந்த நிலையில்இதற்கானசிறப்பு முகாம் கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி மின்வாரிய அலுவலகங்களில் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10:30 மணி முதல் மாலை 5.15 மணி வரை ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள்நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று வரை 1.15 கோடி மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பில் 'தமிழ்நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2,811 அலுவலக சிறப்பு முகாம்கள் மூலம் மின் இணைப்பு எண்களுடன் ஆதார் இணைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் இன்று வரை 1.15 கோடி இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

aadhar electicity senthilbalaji
இதையும் படியுங்கள்
Subscribe