Advertisment

பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த 11 வயது சிறுவன்! 

11 Years old boy passes away

Advertisment

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் பகுதியிலுள்ள தவிட்டுப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன். இவருக்கு 11 வயதில் குமரேசன் என்ற மகன் உள்ளார். குமரேசன் அதே பகுதியில் தாத்தா கருப்பையா வீட்டில் தாத்தாவுடன் வசித்து வந்தார்.

சமீபத்தில் அவருடைய தாத்தா உயிரிழந்ததை அடுத்து மன உளைச்சலிலிருந்த குமரேசன், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றித் தீக்குளித்து உள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின் குமரேசன் மீது பரவியிருந்த தீயை அணைத்து, அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் உடல் முழுவதும் கருகிய நிலையில் குமரேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe