ADVERTISEMENT

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

08:47 AM May 23, 2018 | Anonymous (not verified)


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று காலை, 9:30 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

கடந்த மார்ச் மாதல் 16ம் தேதி துவங்கி ஏப்.20 வரை நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன. இந்த தேர்வில், 10.01 லட்சம் மாணவ, மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், இன்று காலை, 9:30 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

தேர்வு முடிவுகள் மாணவர்களின் மொபைல்போன் எண்ணுக்கு, மதிப்பெண் விபரங்களுடன், வரும் எஸ்.எம்.எஸ், மூலம் தெரிந்துகொள்ளலாம். மேலும், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற, இணையதளங்களிலும், மாணவர்கள் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், வரும், 28ல் வழங்கப்படும். தேர்வர்கள், தங்கள் பள்ளிகளில் சான்றிதழை பெறலாம். தேர்வுத்துறையின், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும், தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT