ADVERTISEMENT

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - திருப்பூர் முதலிடம்

09:57 AM Apr 29, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

2019ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், திருப்பூர் மாவட்டம் தேர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளது.

ADVERTISEMENT

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், மாணவிகள் மற்றும் மாணவர்கள் என மொத்தமாக 95.02% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


மாணவர்களை காட்டிலும் மாணவிகளே தேர்ச்சியில் 3.7% பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். மாணவிகள் 97% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் மாணவர்கள் 93.3% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


மாவட்டங்கள் வாரியாக திருப்பூர் 98.53% கொண்டு முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்தப்படியாக இராமநாதபுரம் 98.48% கொண்டு இரண்டாம் இடத்திலும் நாமக்கல் 98.45% கொண்டு மூன்றாம் இடத்திலும் உள்ளது.


தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, மே-2ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனி தேர்வர்கள், மே-6ஆம் தேதி முதல் http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT