ஈரோடு மாவட்டம் நம்பியூரில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், ''தமிழகத்தில் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கு 18- ஆம்தேதிக்குப் பிறகு ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்படும்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கலெக்டருடன் இணைந்து பணிகளை மேற்கொள்வார்கள். தேர்வை எழுத வரும் மாணவ-மாணவிகளுக்குத் தேவையான பஸ் வசதிகள் செய்து கொடுக்கப்படும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்படும். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வரும் மாணவர்களுக்கு தனி வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பிளஸ்-2 விடைத்தாள்களைத் திருத்தும் பணியைப் புறக்கணிப்பதாகக் கூறி இருப்பது, அது அவர்களது விருப்பம். அதற்கேற்ப அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்திருந்து பார்க்கவும்'' என்றார்.