Skip to main content

கர்ப்பிணியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி... இளைஞர் மீது வழக்கு!

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

10th class student admitted to hospital as a pregnant ... Case against youth!

 

பள்ளி மாணவி ஒருவர்  கர்ப்பிணியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவத்தில் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

பள்ளியில் படிக்கும்போதே அச்சிறுமியை இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்துள்ளார் ராஜபாண்டி. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் ஆத்திரத்தில் சத்தம் போட்டுள்ளனர். ஏனென்றால், அச்சிறுமிக்கு ஒரு அக்காவும், தங்கையும் இருக்கின்றனர்.  அவர்களது எதிர்காலம் குறித்து பெற்றோர் கவலைப்பட்டனர். இந்நிலையில், சிறுமியின் பெற்றோரும் ராஜபாண்டியின் பெற்றோரும் கலந்து பேசி, கடந்த 30-8-2021 அன்று ராஜபாண்டியின் வீட்டில் வைத்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ராஜபாண்டியும் அச்சிறுமியும் கணவனும் மனைவியுமாக வாழ்ந்து வந்தனர்.

 

அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 10-வது வகுப்பு படித்துவந்த அச்சிறுமியை, 9 மாத கர்ப்பிணியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்த்துள்ளனர். அரசு மருத்துவமனையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு தகவல் கிடைக்க, பாதிக்கப்பட்ட சிறுமியிடமிருந்து வாக்குமூலம் பெற்று, சிறுமியின் அம்மா, அப்பா, கணவர்(?) ராஜபாண்டி, அவருடைய அம்மா, அப்பா பொன்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதுவும் குழந்தைத் திருமணம்தான். ஆனால், புகாரளித்தவர் ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ராஜேஸ்வரி. இவருடன் பணியாற்றும் உறுப்பினர் பாண்டீஸ்வரிக்கு, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 மூலம்,  சிறுமி ஒருவருக்கு நடந்த குழந்தைத் திருமணம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. உடனே, நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.  

 

அந்தச் சிறுமி உள்ளூர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 11-வது வகுப்பு படிக்கிறார். தனது உறவினர் குருசாமியின் மகன் சுரேஷ்குமாரிடம் காதல் வயப்பட்டிருக்கிறார்.  4 மாதங்களுக்குமுன் சுரேஷ்குமார், காதலியான அச்சிறுமியிடம்  ‘நான் உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்..’ எனக் கூறி, நெருங்கிப் பழகியிருக்கிறார். அதனால், அச்சிறுமி மூன்று மாத கர்ப்பமடைய, கடந்த ஜூன் 3-ஆம் தேதி, திருவண்ணாமலை – நரிப்பாறையில் உள்ள கோவிலில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். 

 

விசாரணையின் முடிவில், 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை 3 மாத கர்ப்பமாக்கிய சுரேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ராஜேஸ்வரியும் அவருடன் பணியாற்றுபவர்களும் சேர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்று புகாரளிக்க, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.