Skip to main content

ஆளுநருக்கு கருப்பு கொடி... தாசில்தார்கள்,. ஆர் ஐ இடமாற்றம்!     எப்படி எல்லாம் பழிவாங்க துடிக்கிறாங்கப்பா...

Published on 24/07/2018 | Edited on 24/07/2018
flag

   

புதுக்கோட்டைக்கு கடந்த 20 ந் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுக்காக வந்தார். ஆளுநர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் கருப்பு கொடி காட்ட போலீஸ் அனுமதி கேட்டனர். வாய் மொழியாக அனுமதி மறுத்தாலும் அரசு மகளிர் கல்லூரிக்கு எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நின்று கருப்புக் கொடி காட்ட அனுமதி அளித்து தடுப்புகள் கட்டப்பட்டது.  அதனால் திமுக உள்ளிட்ட கட்சிகள் கருப்புக் கொடியுடன் போலிசார் அனுமதித்திருந்த திடலில் திரண்டனர். 


இந்த நிலையில் ஆளுநர் வர அரைமணி நேரம் முன்பே கருப்பு கொடி காட்டச் சொல்லி அனைவரையும் கைது செய்து 3 மண்டபங்களில் அடைத்தனர். அங்கு தண்ணீர வதிகளும் இல்லை. மாலை விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நிலையில் இரவிலும் விடுதலை செய்யப்படவில்லை. 


மாலை 4 மணிக்கு  ஆளுநர் திருச்சி புறப்பட்டு சென்ற பிறகு கைதானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பும் பணி போலிசார் தொடங்கினார்கள். அதன் முதல்கட்டமாக மாவட்டம் முழுவதும் இருந்து முதல் தகவல் அறிக்கை பதிவேற்றும் கணினி ஆப்பரேட்டர்களை புதுக்கோட்டை நகரத்திற்கு வரவழைத்தனர். 800 பேர் மீது பிணை கிடைக்காத பிரிவுளில் வழக்கு பதிவு செய்யனும் என்று தகவலும் சொல்லப்பட்டது. அர்களும் தயாரானார்கள்.
   

இந்த தகவல் அறிந்த மண்டபங்களில் சிறைபட்டிருந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தண்ணீர் உணவின்றி பலர் மயங்கினார்கள். 
அதே நேரத்தில் திமுக மற்றும் தோழர்கள் தடையை மீறி கருப்புக் கொடி காட்டியதாக வருவாய் துறை அதிகாரிகளிடம் புகார் வாங்கும் முயற்சியில் இறங்கினார்கள் முதலில் போராட்டம் நடந்த இடத்தில் பணியில் இருந்த ஆலங்குடி தாசில்தார் ரெத்தினாவதியிடம் கைது செய்யப்பட்டவர்கள் மீது புகார் கொடுங்கள் என்று கேட்க தன்னிச்சையாக வழக்கு பதிவு செய்ங்க நான் புகார் தரல என்று சொல்லிவிட்டார்.  அதன் பிறகு அதே பகுதியில் பணியில் இருந்த கந்தர்வகோட்டை தாசில்தார் தேவசேனா விடம் புகார் கேட்க அவரும் மறுத்துவிட்டார் கடைசியாக அப்பகுதி வருவாய் ஆய்வாளர் வைரவனிடம் புகார் கேட்க அவரும் புகார் கொடுக்க மறுத்துவிட்டார். இப்படி ஒவ்வொரு அதிகரியாக கேட்டு புகார் வாங்க முடிவில்லை. எப்படியும் புகார் வாங்கி சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு குற்றாலத்தில் குளித்து வந்த டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறையினர் முனைப்பு காட்டினார்கள். 

 

ri

 

அதே நேரத்தில் கைது செய்தவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி திருக்கோகர்ணம், ஆலங்குடி, கந்தர்வகோட்டை பகுதிகளில் மறியல் தொடங்கியது. சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று உளவுத் துறை தகவலால் நள்ளிரவு 12 மணிக்கு விடுதலை செய்தனர்.


   ஆனால் திமுக மற்றும் தோழர்களை பழிவாங்க நினைத்தவர்கள் அதை செய்ய தடையாக இருந்ததாக தாசில்தார்கள், ஆர்.ஐ் போன்றவர்களை இடமாற்றம் செய்து பழியை தீர்த்துக் கொண்டனர்.

 

ri1


    இதனால் கொதிப்படைந்துள்ள வருவாய் துறையினர் மாலை அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதனால் போராட்ட அறிவிப்பு இன்று மாலை இருக்கும் என்று கூறுகின்றனர் வருவாய்துறையினர்.
 எப்படி எல்லாம் பழிவாங்க துடிக்கிறாங்கப்பா.

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரு லட்சம் மாணவர்களுடன் புத்தகம் வாசித்து மாணவர்களை ஊக்கப்படுத்திய மாவட்ட ஆட்சியர்!

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 collector mercy Ramya who encouraged the students by reading book with one lakh students

 

“நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்பார் ஆபிரகாம் லிங்கன். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் ஆறாவது புத்தக திருவிழா நிகழ்வு வருகின்ற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை 80 அரங்குகளில் பல லட்சம் புத்தங்களோடு நடைபெற இருக்கிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், இலக்கிய ஆளுமைகள், அரசு உயரதிகாரிகள், படைப்பாளிகளின் சொற்பொழிவுகள், சாதனையாளர்களுக்கு விருதுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. 

 

இதற்கு மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களான நூறு நாள் வேலைத்திட்டப் பகுதிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் நேற்று ஒரு மணி நேரம் வாசிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நிகழ்வில் ஒரு லட்சம் மாணவ மாணவியர்களோடு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா பங்கேற்று புத்தகம் வாசித்தார்.   

 

 collector mercy Ramya who encouraged the students by reading book with one lakh students

 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், “வாசிப்புப் பழக்கம் மாணவர்களின் மூளைக்கு ஒரு சிறந்த பயிற்சி. நினைவாற்றலை மேலும் வளர்க்கும், படைப்பாற்றல் மற்றும் சிந்தனைத்திறன் மேம்படக்கூடும். உலகில் பெரிய மாமேதைகள் அனைவரும் புத்தக வாசிப்பினாலும் உருவானவர்களே. இன்றைய விஞ்ஞான உலகில் மாணவர்களிடம் புத்தகம் வாசிப்பு என்பது மிகவும் குறைந்துவிட்டது. ஆகையால் இன்றைய குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் அதன் நன்மைகளையும் எடுத்துரைத்து புத்தகம் வாசிக்கத் தூண்ட வேண்டும். அதிலும் மிக முக்கியமாக மாணவிகள் வாசிக்க வேண்டும்” என்றார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மொத்தம் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேற்று ஒரு மணி நேரம் புத்தகங்களை வாசித்தனர்.

 

 

 

Next Story

மின்னல் தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கி அமைச்சர் ஆறுதல்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

Minister comforts the family of the girl who passed away due to lightning

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி ஒத்தாங்கொல்லை பகுதியை சேர்ந்த கோபு சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வித்யா (31), மகள் பவ்யாஸ்ரீ (2). இருவரையும் ஊரில் விட்டுவிட்டு சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

 

கடந்த வாரம் வித்யா உறவினர் வீட்டு விசேசத்திற்கு சென்று மாலை வீடு திரும்பியவர் மழை வரும் போல் இருந்ததால் வீட்டு வாசலில் கொட்டிக்கிடந்த காய்ந்த இலைகளை கூட்டிக் கொண்டிருந்த போது திடீரென அருகில் நின்ற புளிய மரத்தில் தாக்கிய மி்ன்னல் வித்யாவையும் தாக்கி உடலையும் அவர் அணிந்திருந்த நகைகளையும் கருக்கியது. அக்கம்பக்கத்தினர் வித்யாவை மருததுவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடியும் பயனில்லை. மின்னல் தாக்கிய வேகத்திலேயே உயிர் போய்விட்டிருந்தது. இதனால் ஊரே சோகத்தில் மூழ்கிய நிலையில் சிங்கப்பூரில் இருந்த கணவர் கோபுவும் சொந்த ஊருக்கு திரும்பினார்.

 

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி வளர்மதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தமிழ்நாடு அரசு பேரிடர் நிவாரண நிதி ரூ. 4 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். 2 வயது கைக்குழந்தையோடு கண்ணீர் மல்க நிவாரணக் காசோலையைப் பெற்றுக்கொண்ட கோபு பேச முடியாமல் குமுறியது அனைவரையும் கரைய வைத்தது.