Skip to main content

சேலம் மாவட்டத்தில் 1000 கோடியில் வளர்ச்சி பணிகள்! அமைச்சர் நேரு தகவல்!!

Published on 17/06/2022 | Edited on 17/06/2022

 

1000 crore development works in Salem district! Minister Nehru informed !!

 

சேலம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, வெள்ளி கொலுசு உற்பத்தி மையம், பாதாளச் சாக்கடைத் திட்டம், சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

 

சேலத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை (ஜூன் 16) நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்தார். தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, 486 பயனாளிகளுக்கு 2.43 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

 

விழாவில் அவர் பேசியதாவது, "மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னிடம் வைத்துக்கொண்டு, உடனுக்குடன் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார். அந்த வகையில், ஒரே நாளில் 168 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டது சேலத்தில்தான். 

 

1000 crore development works in Salem district! Minister Nehru informed !!

 

சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மாற்றுத்திறனாளிகள் மிகவும் கவனமுடன் வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு உதவிட முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில், சேலம் மாவட்ட அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். 75 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில், முதல்வரே நேரில் வந்து 35 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு கண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். எஞ்சிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஒவ்வொரு வாரமும் மாவட்ட ஆட்சியர் உதவிகளை வழங்கி வருகிறார்.

 

இதையடுத்து, 2 ஆயிரம் குடும்பங்களுக்குப் பட்டா வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 120 கோடி ரூபாயில் பாலம் கட்டப்படுகிறது. பனைமரத்துப்பட்டி ஏரியைச் சீரமைத்து, சேலம் மாநகராட்சிக்குத் தடையின்றி குடிநீர் வழங்க 99 கோடி ரூபாயை முதலமைச்சர் ஒதுக்கி உள்ளார். 

 

மூக்கனேரியை மேம்படுத்த 30 கோடி ரூபாய், போடிநாயக்கன்பட்டி ஏரியைச் சீரமைக்க 21 கோடி, அல்லிக்குட்டை ஏரியை மேம்படுத்த 18 கோடி என மொத்தம் 167 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. 

 

ஒருங்கிணைந்த வெள்ளிக் கொலுசு மையம் 25 கோடி ரூபாயில் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 100 ஏக்கரில் ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாகத் தொழில் அதிபர்களுடன் ஆலோசித்து இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. 

 

1000 crore development works in Salem district! Minister Nehru informed !!

 

மேலும், 20 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த விளையாட்டுத் திடலை சிறைத்துறைக்குச் சொந்தமான இடத்தில் ஏற்படுத்திட ஆய்வு செய்து வருகிறோம். குடிநீர், சாலை சீரமைப்பு, பாலம், பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நடந்து வருகின்றன. 

 

இந்த வகையில் சேலம் மாவட்டத்திற்கு மட்டும் நடப்பு ஆண்டில் 1000 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கி உள்ளார்." இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார். 

 

இந்த விழாவில், பார்த்திபன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, ஆணையர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 



சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.