Skip to main content

100 கோடி மதிப்புள்ள நிலம்... ஏமாற்றும் அரசு அதிகாரி... கண்டுகொள்ளாத காவல்துறை!!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் உள்ள முத்தானூர் கிராமத்தில் சுமார் 75 ஆண்டுகளுக்குமுன்பு நியூமேன்துரை என்பவர் வசித்துவந்தார். அவருக்கும், அவரது சகோதருக்குமாக சேர்த்து மலையில் 44 ஏக்கர் நிலம் வாங்கி வைத்திருந்துள்ளனர். அந்த நிலத்தை 1954ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த கோபால்ரத்தினம் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். கோபால் ரத்தினம் இறந்துவிட அவரது மனைவி மகீதா ரத்னம் நிலத்தை விற்பனை செய்ய முடிவெடுத்து ஒரு பகுதியை விற்பனை செய்துள்ளார்.

 

 100 crores worth of land ... deceitful government official ...


அந்த வகையில் அவரிடமிருந்து திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த இக்பால் என்பவர் தனது மனைவி பகீம்பேகம் பெயரில் 12 ஏக்கர்நிலத்தை வாங்கியுள்ளார். அதில் 6 ஏக்கர் நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்துள்ளார். இதனை திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களை சேர்ந்த பலர் மலைவாஸ்தலம் என மனைகளை வாங்கியுள்ளனர்.

வாங்கிய ஒருவரால் கூடஅங்கு வீடு கட்டமுடியவில்லை. அதற்கு காரணம் அங்குள்ள அரசு ஊழியரான மலைவாசியான ஒருவர், இது என் இடம் எனச்சொல்லி தகராறு செய்து தனது உறவினர்கள் மூலமாக மிரட்டியுள்ளனர். இதனால் பலரும் இடம் வாங்கியும் வீடு கட்ட முன்வரவில்லை.  இரண்டு பேர் மட்டும் கூட்டுறவுகடன் சங்கத்தின் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளனர், அங்குகுடி வர முயற்சிக்க அவர்களை அந்த அரசு ஊழியர் விடாமல் மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இடம் வாங்கியவர்கள், வீடு கட்டியவர்களுக்கும் மனை விற்பனை செய்த இக்பால் என்பவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். காவல் துறையின் நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும் சென்றது. அவற்றிலெல்லாம் இக்பால் தரப்புக்கே நிலம் என்கிற ரீதியில் முடிவாகியிருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பு வந்த நிலையிலும், அந்த இடத்தின் அருகில் கூட நில உரிமையாளர்களை விடாமல் அடாவடி செய்துள்ளார் அந்த அரசு ஊழியர். இவருக்கு ஏலகிரி காவல்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளார்கள்.

 

 100 crores worth of land ... deceitful government official ...


இந்நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தருமபுரியை சேர்ந்த வீட்டுமனை உரிமையாளர் பழனிச்சாமி, தான் வாங்கிய மனைக்கு சென்று அவற்றை சீர்படுத்தச் முயன்றனர். அப்போது சிலர் வந்து அவர்களை மிரட்டி விரட்டியிருக்கிறார்கள். அதுபற்றி ஏலகிரி காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர். அவர்கள் மிரட்டியவர்களுக்கு சாதகமாக பேசி மிரட்டியதால் திரும்பி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 02.02.2020 அன்றுவீட்டுமனை உரிமையாளர்கள் மனைகளை சீர்படுத்த இயந்திரங்கள் சகிதமாக சென்றனர். ஆதாரத்துக்காக வீடியோ கிராபரை உடன் அழைத்து சென்று பணிகளைமேற்கொண்டிருந்த போது, கூலிப்படையுடன் வந்த அந்த சிலர், மனையின் உரிமையாளர்களில் ஒருவரான  தர்மபுரி மாவட்டம் கொல்லஹள்ளி பகுதியை சேர்ந்த பழனிசாமி  என்பவர் மீது கொலைவெறிதாக்குதல் நடத்தியுள்ளனர்.

ரத்தம் சொட்ட சொட்ட பழனிசாமி மற்றும் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் மலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவயிடத்துக்கு சென்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீசாரிடம், பழனிச்சாமியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளனர். அடித்தவர்களை அடையாம் காட்டியுள்ளார் பழனிச்சாமி. அதற்கான ஆதாரமாக வீடியோ பதிவுகளை தந்துள்ளார்.

நீ எப்படி அடிச்சதெல்லாம் வீடியோ எடுக்கலாம் என வீடியோ கேமராவை பிடுங்கிக்கொண்ட போலீஸார், அவர்களை சாலை மறியல் செய்யறதை விட்டு எழுந்து போங்க என மிரட்டியுள்ளார்கள். எங்கள் இடம், நீதிமன்ற தீர்ப்பு குறித்த நகல்கள் தந்தபோது, அதெல்லாம் வாங்க முடியாது. அவுங்க சொல்றதை கேட்டு ஓடிப்போங்க என அனைவர் முன்னிலையிலும் மிரட்டியுள்ளனர் போலீஸார். அதன்பின் திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேல் வந்து சமாதானம் செய்து சாலைமறியலை கைவிட செய்துள்ளார்.

தாக்கப்பட்ட பழனிச்சாமி தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் தன்னை தாக்கிவிட்டதாக பாப்பாத்தி என்பவர் பழனிச்சாமி மீது புகார் தந்துவிட்டு மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இக்பால் மனைவி வாங்கிய 12 ஏக்கர் நிலமும், மீதமுள்ள 32 ஏக்கர் எனமொத்தம் 44 ஏக்கரை அபகரிக்க முயல்கின்றனர். அதன் மதிப்பு 100 கோடி என்கிறார்கள் விலை நிலவரம் அறிந்தவர்கள். அதனை ஆவணங்கள் எதுவும்மில்லாமல் அபகரிக்க சிலர் முயற்சி செய்ய காவல்துறை உடந்தையாக உள்ளது என்கிறார்கள் மலையை சேர்ந்த விபரம் அறிந்தவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது