Skip to main content

ஓசூர் மாநகராட்சி கமிஷனர் உள்பட 10 பேர் இடமாற்றம்!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

10 transferred, including Hosur Corporation Commissioner!

 

உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஓசூர் மாநகராட்சி ஆணையர் உட்பட 10 ஆணையர்கள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

 

தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றிவரும் ஆணையர்கள், முந்தைய ஆட்சியில் செல்வாக்குடன் இருந்த உயர் அலுவலர்கள் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டுவருகின்றனர். தற்போது பரவலாக மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். முதற்கட்டமாக 10 மாநகராட்சி ஆணையர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

அதன்படி, உள்ளாட்சித்துறை இணை இயக்குநராக பணியாற்றிவரும் பாலசுப்ரமணியன், ஓசூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் ஆர்.டி.எம்.ஏ. ரவிச்சந்திரன், கரூர் மாநகராட்சி ஆணையராகவும்; தேசிய நகர்ப்புற பெண்கள் மேம்பாட்டு இணை இயக்குநராக உள்ள கண்ணன், கோவை நகர்ப்புற பணியாளர்கள் பயிற்சி மைய இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

செங்கல்பட்டு ஆர்.டி.எம்.ஏ. சரவணன், மதுரை ஆர்.டி.எம்.ஏ. ஆகவும்; கோவை நகர்ப்புற பணியாளர்கள் பயிற்சி மைய இயக்குநராக உள்ள நாராயணன், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நகராட்சி ஆணையராக பணியாற்றிவந்த 5 பேர் மாநகராட்சி ஆணையராகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். 

 

கோவை நகர்ப்புற பணியாளர்கள் பயிற்சி மைய துணை இயக்குநராக உள்ள விஸ்வநாதன் கடலூர் மாநகராட்சி ஆணையராகவும், உதகமண்டலம் நகராட்சி ஆணையராக பணியாற்றிவரும் சரஸ்வதி ஆவடி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

கும்பகோணம் நகராட்சி ஆணையராக உள்ள நவேந்திரன், தேசிய பெண்கள் மேம்பாட்டு மைய இணை இயக்குநராகவும்; கடலூர் நகராட்சி ஆணையராக பணியாற்றிவரும் மகேஸ்வரி, உள்ளாட்சித்துறை இணை இயக்குநராகவும்; கோவில்பட்டி நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

இதற்கான உத்தரவை அரசு கூடுதல் முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி கொலை; பெற்றோர் உட்பட 3 பேர் கைது!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
girl child incident for Bagalur near Hosur in Krishnagiri District

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் கிராமத்தில் பிரகாஷ் (வயது 40) - காமாட்சி (வயது 35) என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களின் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மகள் கடந்த 14 ஆம் தேதி (14.02.2024) வீட்டில் இருந்து வெளியே சென்றார் எனவும், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடலில் காயங்களுடன் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது இளைஞர் ஒருவரை சிறுமி காதலித்து வந்ததாகவும், அதனை பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் மீண்டும் சிவாவுடன் பழகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் சிவாவுடன் பழகக் கூடாது என பெற்றோர் கூறியதை சிறுமி ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமியை பெற்றோரே கட்டையால் தலையில் தாக்கி கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுமி காணாமல் போன அன்று வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமரா துணியால் மறைக்கப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் பெற்றோரான பிரகாஷ் - காமாட்சி மற்றும் சிறுமியின் பெரியம்மா காமாட்சி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறைச் சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

Next Story

பட்டாசு கிடங்கில் தீ விபத்து; சூழும் கரும் புகையால் மக்கள் அச்சம்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Fireworks warehouse fire; People are afraid of surrounding smoke

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜீமங்கலம் பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜீமங்கலம் என்ற பகுதியில் வடிவேல் என்பவர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பட்டாசுக் கிடங்கு ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை அந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த வான வேடிக்கை பட்டாசுகள் மற்றும் சத்தத்துடன் வெடிக்கக்கூடிய பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால் பல அடி உயரங்களுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

vck ad

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்புத் துறையினர் நீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகின்றனர். ஆனால் பட்டாசு குடோன் என்பதால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெடித்துச் சிதறுகிறது. இது தொடர்பான காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவ இடத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளும் குவிந்து வருகின்றனர். அந்தப் பகுதி மக்களுக்கு விபத்து காரணமாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.