Skip to main content

10 ஆயிரம் போலீசார் 95 சிசிடிவி கேமராக்கள்; தமிழக டிஜிபி பேட்டி

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

 "10 thousand policemen... 95 CCTV cameras..."-Tamil DGP interview

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பேசுகையில், ''பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஐஜி ஆஃப் போலீஸ் தலைமையில் நான்கு டெபுடிக் இன்ஸ்பெக்டர்ஸ், 34 சூப்பிரண்ட் எஸ்பிக்கள், மற்ற காவலர்கள் என சேர்த்து மொத்தம் 10 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதற்கான எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முறை முதல் முறையாக நாம் ட்ரோன்களை பயன்படுத்தியிருக்கிறோம். கூட்டத்தைக் கண்காணிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் திட்டமிட்டு இருக்கிறோம். நிகழ்ச்சிக்கு வரக்கூடிய நபர்கள் போலீசார் பாதுகாப்புடன் சரியான வழிகளில் வந்து மரியாதை செலுத்திவிட்டு வேறொரு வழியில் செல்வதைப் போல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

 

பசும்பொன் பகுதியில் மட்டும் ஆயிரம் போலீசார் இருப்பார்கள். 95 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் ஈடுபடப்போகும் போலீசாருக்குத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்குவதற்கான இடம், உணவு எல்லாவற்றையும் ஏற்பாடு செய்திருக்கிறோம். இப்பொழுது அவர்களுக்கு ஷிப்ட் டூட்டி மட்டும்தான் கொடுக்கிறோம். குறிப்பிட்ட நாள் வரும்போது ஃபுல் டூட்டியில் வருவார்கள். பொதுமக்கள் அமைதியாக வந்து நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் காவல்துறையின் வேண்டுகோள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அன்பில் மகேஷ் மரியாதை

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Anbil Mahesh respects the statue of Muthuramalinga Thevar

 

திருச்சியில் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

இந்நிகழ்வில் கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு‌.மதிவாணன் மாவட்ட மாநகரக் கழக நிர்வாகிகள் அரங்கநாதன், கோவிந்தராஜ், செங்குட்டுவன்,  மூக்கன்,  லீலாவேலு பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், ராஜ் முகமது, மணிவேல்,  சிவாகுமார் ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தேவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 

 

Next Story

"தேவரின் தேசிய சிந்தனைகளை பாடமாக கற்றுத்தர வேண்டும்" - வைரமுத்து விருப்பம்

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

vairamuthu about muthuramalinga thevar

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது பிறந்த நாள் விழா இன்று (30.10.2023) கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் 61வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி அவரது திருவுருவச் சிலைகளுக்கு முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். 

 

அந்த வகையில் கவிஞர் வைரமுத்து சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், "தேவர் திருமகன் என்பது ஒரு இனப்பெயர் அல்ல. தேசத்தின் அடையாளங்களில் ஒன்று. அருள்கூர்ந்து தமிழ் சமூகம் தேவர் பெருமகனை ஒரு சாதி வட்டத்துக்குள் அடைத்து விட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இது என் குரல் அல்ல. தேவர் பெருமகன் சொன்ன சொல். 

 

தேவர் திருமகன் சொன்னார், எனது ஆறு மாதத்தில் தாயை இழந்தேன்; எனக்குப் பாலூட்டியவர் ஒரு முஸ்லிம் தாய், கல்வி கொடுத்தோர் கிறித்துவப் பாதிரிமார்கள் என் பெற்றோர் இந்துக்கள், இதில் எங்கே இருக்கிறது சாதி? என கேட்டார். அவரை சாதி என்ற வட்டத்தை விட்டுவிட்டு தேசியம் என்ற பெரும் சிந்தனைக்குள் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் சொன்னார், 2 லட்சம் ஓட்டுகள் வாங்கி வெற்றிபெற்றேன். இதில் என் சமுதாய ஓட்டுகள் வெறும் 18 ஆயிரம் தான். மீதமுள்ள ஓட்டுகள் எல்லாம் அத்தனை சமூகவத்தரும் இட்டு வெற்றிபெற செய்தார்கள் என்றார். அந்த வட்டத்தை விட்டு அவரை வெளியே கொண்டு வந்து அவரது தேசிய சிந்தனைகளை, சமூக சிந்தனைகளை, அவரது தியாகத்தை, ஒரு பெரிய பாடமாக இளைய தலைமுறைக்கு கற்றுத்தர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

 

இன்னொன்று, தேவர் என்று சொன்னால், அது சாதிய அடையாளம் என்று ஒரு குறிப்பிட்ட வட்டம் என்பது இல்லை. உ.வே சாமிநாத ஐயர் என்று சொன்னால் அது சாதிய அடையாளமா, வ.உ சிதம்பரம் பிள்ளை என்று சொன்னால் அது சாதிய அடையாளமா, லட்சுமண சாமி முதலியார் என்று சொன்னால் அது சாதிய அடையாளமா, இவையெல்லாம் அவர்களின் குடி அடையாளம். என் தந்தை வரைக்கும் தேவர் என்ற பட்டத்தை வைத்து கொண்டது அவர்களின் அடையாளம். நான் வைத்துக்கொள்ள போவதில்லை என்பது எனது சமூகசீர்திருத்தம், எனது உள்ளம். எனவே பழைய பெயர்களை அழித்து விட வேண்டாம். புதிதாக யாரும் சாதி பெயர்களை வைத்து கொள்ள வேண்டாம் என்பது எனது வேண்டுகோளாக இருக்கிறது. அம்பேத்கரை எல்லா சமூகமும் கொண்டாட வேண்டும் என்பதை போல தேவரையும் அனைத்து சமூகமும் கொண்டாட வேண்டும்" என்றார்.