Skip to main content

ரஜினி ரசிகரின் 10 ரூபாய் சாப்பாடு! ‘சித்தாள்’ திறந்துவைத்த ‘உழைப்பாளி’ உணவகம்!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

ரஜினியின் தீவிர ரசிகராக  10 ரூபாய் சாப்பாடு வழங்கும் உணவகத்தை ஆரம்பித்திருக்கிறார் ‘அம்மா’ உணவகம் தொடங்க ஆலோசகருமாக இருந்தவரும்  பிரபல சித்தமருத்துவருமான டாக்டர் வீரபாபு.

சென்னை மணப்பாக்கம் எம்.ஜி.சாலையில் உழைப்பாளிகளுக்காக மிகக்குறைந்த விலையில் தொடங்கப்பட்ட உணவகத்தை கட்டிடவேலை செய்யும் பெண்மணியை வைத்தே திறந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் டாக்டர் வீரபாபு. துணை ஆணையர் பிரபாகர், நந்தம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், ரஜினி ரசிகர் மன்றத்தினர் என பலரும் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டார்கள்.  

 

10 rupees worth food hotel; Rajini fan birthday celebration


டெங்கு காய்ச்சலுக்கு பலியாகிக்கொண்டிருந்த ஏழை எளிய மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச் சாறு கொடுத்து பல்வேறு உயிர்களை காப்பாற்றக் காரணமாக இருந்தவர் டாக்டர் வீரபாபு. அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட  பல்வேறு  நோய்களுக்கு சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பு அருகே  ‘வேரும் தழையும்’ என்கிற பெயரில் சித்த மருத்துவமனை ஆரம்பித்து தமிழ்மருத்துவத்தின்மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்திவருகிறார்.

 

10 rupees worth food hotel; Rajini fan birthday celebration


தற்போது, 2019 டிசம்பர்-12  ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செய்துவரும் சூழலில், ரஜினியின் தீவிர ரசிகரான டாக்டர் வீரபாபு, ஏழை எளிய மக்கள் சாப்பிடும் விதமாக சென்னை மணப்பாக்கம் எம்.ஜி.சாலையில் 10 ரூபாய் உணவகத்தை ஆரம்பிக்கிறார். இந்த உணவகத்திற்கு, ரஜினி நடித்த ‘உழைப்பாளி’ என்ற தலைப்பையே பெயராக சூட்டியிருக்கிறார்.

 

10 rupees worth food hotel; Rajini fan birthday celebration

 

70 ரூபாய்க்கு குறைந்து, உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு ஹோட்டல்கள் சென்னையில் இல்லை. கையேந்திபவனில்கூட 50 ரூபாய்க்கு குறைவாக சாப்பாடு விற்கப்படவில்லை. ஆனால், உணவகத்தின் வாடகை, மளிகைப்பொருட்கள் என பல்வேறு செலவுகள் உள்ளன. அப்படியிருக்க, 10 ரூபாய்க்கு எப்படி  சாப்பாடு போடமுடியும்? என்று நாம் கேட்டபோது, “ஏற்கனவே, சென்னை மாநகராட்சி வளாகத்துக்குள் கடந்த 7 வருடங்களுக்குமேலாக 15 ரூபாய்க்கு சாப்பாடு மற்றும் பல்வேறு பாரம்பர்யமிக்க ஆரோக்கியம் நிறைந்த பதார்த்தங்களை மிகவும் குறைந்தவிலைக்கு விற்பனை செய்துவந்தேன். இதனால், ஒருநாளைக்கு 1,000 பேர் பயன்பெற்றார்கள். இனி, அதைவிட அதிகமான ஏழை எளிய உழைப்பாளிகள், தொழிலாளிகள் பயன்பெறுவார்கள். நான், ரஜினியின் தீவிர ரசிகன். ஒரு சாதாரண ரசிகனாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்ய இருக்கிறேன். அதன், முதல்கட்டம்தான் உழைப்பாளி உணவகம்.

 

rajinikanth birthday


இதுகுறித்து, தலைவரின் உதவியாளர்களிடம் அனுமதி கேட்டபோது,  ‘ஏழைங்க வயிறார சாப்பிடுற நல்ல விஷயத்தைதானே செய்றீங்க. தாரளமா செய்ங்க’ என்று உற்சாகமூட்டினார்கள். தற்போது, தொடங்கியிருக்கிறேன். மிகப்பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு 30 ரூபாயில் சாப்பாடும் வழங்கப்படுகிறது.

 

10 rupees worth food hotel; Rajini fan birthday celebration

 

இதுமட்டுமல்ல, திணை எள்ளுருண்டை, வாழை இலை கொழுக்கட்டை, கேழ்வரகு புட்டு, திணை அல்வா, சோளப்பணியாரம், வல்லாரை- முடக்கத்தான்- கம்பு-சோளம்- கேழ்வரகு தோசை இவையெல்லாம் 10 ரூபாய்தான். இதுபோக, தூதுவளை, வல்லாரை, முடவட்டுக்கால் போன்ற ஆரோக்கிய நிறைந்த மூலிகை சூப்கள் 10 ரூபாய் என விலை குறைவாகவும் ஆரோக்கியமான உணவமாகவும் இருக்கும்”என்கிறார் உற்சாகமாக.

 

10 rupees worth food hotel; Rajini fan birthday celebration

 

மணப்பக்கம் பகுதியில் மட்டுமல்ல, சுற்றியுள்ள அத்தனை ஏரியாக்களிலிருந்தும் மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது உழைப்பாளி உணவகம். ரஜினி ரசிகர்போல மற்றவர்களும் இதை ஃபாலோ-அப் செய்யலேமே!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.