Skip to main content

திண்டுக்கல்லில் செல்லாத 10 ரூபாய் நாணயம்??  நடவடிக்கை எடுப்பாரா கலெக்டர்?

Published on 21/01/2020 | Edited on 21/01/2020

இந்திய அரசின் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்ததின் படி இந்தியா முழுவதும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பத்து ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருந்து வருகிறது. அதுபோல் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பத்து ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் பத்து ரூபாய் நாணயம் மக்களிடமும், கடைக்காரர்களிடமும் புழக்கத்தில் இருப்பதை பார்க்க முடியவில்லை. அதுபோல் பத்து ரூபாய் நாணயத்தை மக்களும் வாங்குவதில்லை. கடைக்காரர்களிடம் கொடுத்தாலும் கூட வாங்க மறுக்கிறார்கள். அந்த அளவிற்கு தடைசெய்யப்பட்ட நாணயமாக இருந்து வருகிறது.

பத்து ரூபாய் நாணயத்தை பொதுமக்கள் கொடுத்தால் நாங்கள் வாங்க ரெடியாக இருக்கிறோம். அதவே நாங்க மற்ற வியாபாரம் மூலம் திரும்ப மக்களிடம் கொடுக்கும் போது பத்து ரூபாய் நாணயத்தை யாரும் வாங்க மாட்டேங்கிறாங்க. இந்த காசு செல்லாது, அதனால நோட்டாக கொடுத்திருங்கள் என கேட்கிறார்கள்.

 

10 rupee


அதுபோல் மொத்த வியாபாரிகளிடம் சரக்கு வாங்க சென்றாலும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. கேட்கப்போனால் நாங்க பேங்கில் கொண்டுபோய் ஆயிரம், ஐநூறு கொடுத்தாலும் அவர்களும் வாங்குவதில்லை. அப்படியிருக்கும் போது உங்களிடம் எப்படி வாங்க முடியும் என வியாபாரிகளும் தட்டிக்கழித்து விடுகிறார்கள். அதனால் தான் நாங்களும் பொதுமக்களிடம் பத்து ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. இந்த நாணயம் புதிதாக வந்தபோது ஆர்வத்தில் நானும் ஆயிரம் ரூபாய் வரை பத்து ரூபாய் நாணயத்தை வியாபாரம் மூலம் மக்களிடம் வாங்கினேன். அதை திரும்ப கொடுக்கும் போது மற்ற மக்கள் அதை வாங்க மறுத்துவிட்டனர். அதவே இப்ப வரை செல்ல வைக்க முடியாமல் கடையில் பொட்டளம் கட்டி போட்டிருக்கேன். இதுபோல் பல சிறு வியாபாரிகளும் பத்து ரூபாய் காசுகளை பொட்டனம் போட்டுதான் போட்டிருக்கிறார்களே தவிர, செல்ல வைக்க முடியவில்லை என்றார் திண்டுக்கல்லை சேர்ந்த பெட்டிக்கடை உரிமையாளர் செல்வம்.

 

10 rupee coin not to go to Dindigul ??  Will the collector take action?


இது சம்மந்தமாக சமூக ஆர்வலரான தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது… திண்டுக்கல் மாவட்டத்தைத் தவிர பக்கத்து மாவட்டமான மதுரை, தேனி, திருச்சியிலெல்லாம் பத்து ரூபாய் நாணயத்தை கடைக்காரர்கள் வாங்குகிறார்கள். ஆனால் இங்கு மட்டும்தான் சிறு வியாபாரிகள் முதல் பெரும் வியாபாரிகள் வரை வாங்க மறுக்கிறார்கள். அதுபோல் பால் வியாபாரிகள் முதல் காய்கறி வியாபாரிகள் வரை பத்து ரூபாய் நாணயத்தை நீட்டினாலே இந்த காசு செல்லாது. அதற்கு பதிலாக பத்து ரூபாய் நோட்டை கொடுங்கள். இல்லையென்றால் பொருட்களை வைத்துவிட்டு போங்கள் என கூறிவிடுகிறார்கள். அதைவிட கொடுமை என்னவென்றால், பிச்சைக்காரர்கள் கூட பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கிறார்கள். அந்த அளவிற்கு மத்திய ரிசர்வ் வங்கி மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பத்து ரூபாய் நாணயம் செல்லாத நாணயமாக இருந்து வருகிறது. 


அதுபோல் ஐந்து ரூபாய் நோட்டைக்கூட பெட்டிக்கடைகள் முதல் பெரும் வியாபாரிகள் வரை வாங்குவதில்லை. கேட்கப்போனால் இது செல்லாது என அவர்களே ஒரு முடிவு எடுத்துக்கொண்டு ஐந்து ரூபாய் நோட்டை வாங்குவதில்லை. இதையெல்லாம் மாவட்ட நிர்வாகமும் இதுவரை கண்டுகொள்ளவில்லை. இனிமேலாவது இந்த பத்து ரூபாய் நாணயம் புழகத்தில் வருவதற்கும், ஐந்து ரூபாய் நோட்டுளை கடைக்காரர்கள் வாங்குவதற்கும்  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

 

10 rupee coin not to go to Dindigul ??  Will the collector take action?


இது சம்மந்தமாக மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமியிடம் கேட்ட போது… பத்து ரூபாய் நாணயம் எல்லா மாவட்டத்திலேயும் புழகத்தில் இருந்து வருகிறதே. இங்கு மட்டும் புழக்கத்தில் இல்லை என்ற விசயமே நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியுது. உடனடியாக லீடு பேங்க் மேனஜரிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார்.

அதை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே நம் செல்போனை தொடர்புகொண்ட லீடு பேங்க் மேனேஜர் மாரிமுத்துவோ… கலெக்டர் மேடத்திடம் நீங்கள் பேசியதாக கூறினார். நீங்கள் சொன்னது போல் இங்கு மட்டும்தான் பத்து ரூபாய் நாணயம் புழங்கவில்லை. அதனால உடனடியாக பத்திரிகையாளர்களுக்கு பிரஸ் நியூஸ் கொடுத்து, மற்ற மாவட்டம் போல் நம்ம மாவட்டத்திலும் பத்து ரூபாய் நாணயம் புழகத்தில் வருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார். ஆக கூடிய விரைவில் மாவட்ட கலெக்டர் விஜயலெட்சுமியின் அதிரடி நடவடிக்கையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் பத்து ரூபாய் நாணயம் மக்கள் மத்தியில் மீண்டும் புழக்கத்தில் வர இருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.