Skip to main content

"புதுச்சேரி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு" -  முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு!

Published on 28/10/2020 | Edited on 28/10/2020

 

"10 percent reservation in medical studies for rural students in Pondicherry" - Chief Minister Narayanasamy's announcement!

 


புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில்வதற்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவையிலுள்ள முதல்வர் அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன், வளர்ச்சி ஆணையர், புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர்,  உயர் கல்வித்துறை இயக்குனர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.


அதேபோல் கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர், முதலமைச்சரின் செயலாளர், சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

இக்கூட்டங்களுக்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் இருந்து, பேருந்து சேவை பிற மாநிலங்களுக்கு இயக்கத் தயாராக இருந்தாலும் தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை. தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறோம்.

 

மீண்டும் கரோனா தொற்று இரண்டாவது அலையாகப் பரவும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அதனால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அமைச்சரவை கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.  நீட்தேர்வைப் பொருத்தமட்டில் 2018 - 19 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளியில் படித்த 94 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் படித்த 1,346 மாணவர்கள் தேர்வு பெற்று இருக்கின்றனர். அதேநேரம், அரசுப் பள்ளியில் படித்த 16 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.  இந்த 16 பேர்களில் புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேர்,  காரைக்காலைச் சேர்ந்த 3 பேர், மாகேவைச் சேர்ந்த 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  

 

எனவே புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்காக 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளோம். அதை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம். 10 சதவீத இட ஒதுக்கீட்டை மருத்துவப் படிப்பில் வழங்குவதற்கான ஒப்புதலை துணைநிலை ஆளுநரிடமிருந்து  பெறுவோம். அனுமதி மறுத்தால் அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப்படும்.

 

மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கோரி தொடுக்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இட ஒதுக்கீடு என்பது தமிழகத்தில் 69%மாகவும் புதுச்சேரியில் 50%மாகவும் உள்ளது. புதுச்சேரியில் மாநில அரசினுடைய மொத்த இட ஒதுக்கீட்டிலிருந்து பிற்படுத்தப்பட்டோர்,  மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் வழங்கப்படுகிறது.  

 

cnc


அதேபோல் மத்திய தொகுப்பில் இருந்து புதுச்சேரிக்கு 27 சதவீத ஒதுக்கீடு கிடைக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக மோடி தலைமையிலான மத்திய அரசும், இந்திய மருத்துவக் கழகமும் செயல்பட்டு வருகின்றன. இது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையைப் பறிப்பதாகும், அம்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இதை ஏற்க முடியாது. அனைத்துச் சமுதாயத்திற்கும் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்குவதுதான் சமூகநீதி. எனவே உடனடியாக பிரதமர் இதில் தலையிட்டு பிற்படுத்தப்பட்டோர்,  மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, புதுச்சேரிக்கு 27 சதவீதமும், தமிழகத்துக்கு 50 சதவீதமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன். 

 

அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துச் சொன்னால் தேசவிரோதிகள் என பா.ஜ.க ஆட்சி விமர்சனம் செய்கிறது.  குறுகிய காலத்தில் வேண்டுமென்றால் இந்த மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் அவர்கள் தொல்லை கொடுக்கலாம். சர்வாதிகாரப் போக்கு பல ஆண்டுகளுக்கு நீடிக்காது. நாட்டு மக்கள் இவை எல்லாவற்றுக்கும் முடிவு கட்டுவாடுவார்கள்" இவ்வாறு பேசினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதுவே ஆட்சி கவிழ்ப்புக்கு வித்திடும்' - நாராயண சாமி கருத்து

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Narayanasamy opined that this will be the seed for the overthrow of the government

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியைப் பெறுவது என்ற திட்டத்தை எதிர்த்து ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (15.02.2024) தீர்ப்பு வழங்கியுள்ளது.

'அரசை கணக்கு கேட்கும் உரிமை, நாட்டு மக்களுக்கு உள்ளது எனப் பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. இந்த திட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப்பிரிவு 19-ன் கீழ் உட்பிரிவு 1 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. எனவே தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டுமே கருப்புப் பணத்தை ஒழிக்க உதவாது. தேர்தல் பத்திரங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எதிராக அமையும். நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்க தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது அதனால் ஏற்படும் ஆதாயங்களை கருத்தில் கொண்டு இருக்கலாம். தகவல் அறியும் உரிமை சட்டம் அரசியல் நன்கொடைகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது' எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Narayanasamy opined that this will be the seed for the overthrow of the government

இந்த தீர்ப்பை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலரும் வரவேற்று வருகின்றனர். இந்தநிலையில், இது குறித்து புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ள கருத்தாவது, 'ஒரு அரசியல் கட்சிக்கு நிதி கொடுப்பவர்கள் அந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது. அந்த அரசியல் கட்சியினுடைய அனுதாபிகள் என்றும் சொல்ல முடியாது. அவர்கள் அந்த அரசியல் கட்சிக்கு நிர்ப்பந்தம் காரணமாக அல்லது சலுகைகள் பெறுவதற்காக தேர்தல் நிதி கொடுக்கலாம். அதனால் அவர்கள் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் என மத்திய அரசு வைக்கும் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

பணத்தை வைத்து ஆளுங்கட்சியானது தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது, ஆட்சி கவிழ்ப்பு வேலை செய்வதற்கு இது வித்திடுவதாக அமையும். அதற்காகத்தான் உச்சநீதிமன்றம் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு நன்கொடை என்பது வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் இதை வரவேற்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

“ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக மக்களுக்கு துரோகி என்பதை தெளிவாக காட்டுகிறது” - நாராயணசாமி

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

It clearly shows that Governor RN Ravi is a traitor to the people of Tamil Nadu Narayanasamy

 

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சமீபத்தில் “நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனைக் கேள்விக்குறியாக்கும். நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க வேண்டும் என அவசியமில்லை. நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தெரிவித்து ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன்” எனத் தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆளுநருக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

அதே சமயம் அண்மையில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவன் ஜெகதீஸ்வரன் (வயது19) என்பவர் 2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவனின் தந்தை செல்வ சேகரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

 

இந்நிலையில் புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். நீட் விலக்கு மசோதா குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது குறித்துப் பேசுகையில், “இளைஞர்களின் வாழ்க்கையில் தமிழ்நாடு ஆளுநர் விளையாடுகிறார். அவருடைய செயல் ஆளுநர் பதவிக்கு தகுதியில்லாத செயல். தமிழ்நாடு ஆளுநர் நான் அதிகாரத்துடன் இருந்தால் நீட் தேர்வு விலக்குக்கு உறுதியாக ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று சொல்லுவது, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகி என்பது தெளிவாக காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.

 

நீட் விலக்கு மசோதா; ஆளுநருக்கு மாணவியின் தந்தை சரமாரி கேள்வி