10 Nagai fishermen freed

நாகை மாவட்டத்திலிருந்து கடந்த 7 ஆம் தேதி 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப் படகுகளில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் திரிகோணமலையில் வைத்து, படகில் வந்த 10 மீனவர்களையும் கைது செய்திருந்தனர். மேலும், மீனவர்கள் பயன்படுத்திய படகையும் இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்திருந்தனர். எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேருக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் இலங்கை திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisment

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 10மீனவர்களின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்த நிலையில் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் 10 பேரையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளனர். இதன் மூலம் 10 மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

முன்னதாக இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக மீட்டு, தாயகம் அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.