Skip to main content

10 ஏரிகள் நிரம்பி ஊருக்குள் நுழைந்த மழைத் தண்ணீர்...  மக்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

Published on 01/12/2019 | Edited on 01/12/2019

வடகிழக்கு பருவமழை கடந்த சிலநாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து வருகிறது. பல இடங்களிலும் வீடுகள் இடிந்து பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரில் பலபகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் நிரம்பி உள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்தப் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி பார்வையிட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் வைக்க உத்தரவி்ட்டிருந்தார்.

 

10 lakes filled with rainwater entering town ... Firefighters rescuing people!


இந்தநிலையில்தான் மணமேல்குடி தாலுகாவில் உள்ள சின்ன இடையன் ஏரி, பெரிய இடையன் ஏரி, கொள்ளுத்திடல் ஏரி, நெம்மேலிவயல் ஏரி, இடையாத்திமங்கலம் ஏரி, பில்லங்குடி ஏரி, மகாகணபதிபுரம் ஏரி, வினைதீர்த்தகோபாலபுரம் ஏரி, பேட்டிவயல் ஏரி, சுப்பிரமணியபுரம் ஏரி ஆகிய 10 ஏரிகளும் மழைத் தண்ணீரில் நிரம்பி அருகில் உள்ள கட்டுமாவடி, கிருஷ்ணாஜிப்பட்டிணம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் நுழைந்துள்ளது. பல ஏரிகள் உடைப்பு ஏற்படும் நிலையிலும் உள்ளது.

 

10 lakes filled with rainwater entering town ... Firefighters rescuing people!


ஏரிகள் நிரம்பி ஊருக்குள் வந்ததால் அந்தப் பகுதியில் வசித்து வந்த மக்கள் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் சென்ற அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளது. மேலும் இடுப்பு அளவிற்கு மேல் தண்ணீர் வந்துவிட்டதால் முதியவர்கள், குழந்தைகளுடன் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் மக்கள் அசத்தில் இருந்தனர். 

தகவல் அறிந்து வந்த மணமேல்குடி வட்டாட்சியர் சிவக்குமார் உடனடியாக ஊரக வளர்ச்சித்துறை, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்து மக்களை மீட்டு அருகில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து சிகிச்சைக்கும் ஏற்பாடுகள் செய்துள்ளார். அனைவருக்கும் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து அதிகரித்து ஏரிகள் உடைப்பு ஏற்பட்டால் அதனை தடுக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறுகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.