வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆர்.எஸ்.ரோட்டில், ஸ்டேட் பாங்க் எதிரே ஒரு டீ கடை உள்ளது. இந்த டீ கடை கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 12ந்தேதி பீம் என்கிற பெயரில் திறந்துள்ளார் அதன் உரிமையாளர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு டிசம்பர் 12ந் தேதி தனது கடையில் டீ ஒரு ரூபாய் விலைக்கு விற்பதாக கடை முன் பேனர் ஒன்றையும்தொங்கவிட்டுள்ளார். வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களுக்குமட்டும்மல்லாமல், புதியதாக வரும் வாடிக்கையாளர்களுக்குமே ஒரு ரூபாய்க்கு 1 டீ வழங்குகிறார்களாம்.
விலைவாசி உயர்வில் வியாபார நிறுவனங்கள் தள்ளாடி வரும் நிலையில், ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு டீ 1 ரூபாய் விற்பனை செய்யும் டீ கடை உரிமையாளரை ஆச்சர்யத்தோடு பார்க்கிறார்கள் அப்பகுதி மக்கள்.