Skip to main content

1 லட்சம் பிசிஆர் கருவிகள் சென்னை வந்தடைந்தது!!

Published on 05/07/2020 | Edited on 05/07/2020
 1 lakh PCR kits arrive in Chennai !!

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம் அமலில் உள்ளது. அதேபோல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த  முழு பொதுமுடக்கம் மேலும் 7 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கரோனா பரிசோதனைக்காக மேலும்  ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தற்போது சென்னை வந்துள்ளது.

கரோனா பரிசோதனைக்காக 10 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது 5.6 லட்சம் பேர் கருவிகள் கையிருப்பில் உள்ளது. இந்நிலையில் தென் கொரியாவில் இருந்து ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் சென்னை வந்தடைந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்