Advertisment

அக்.14 முதல் +1, +2 அசல் மதிப்பெண் சான்றிதழ்!

+1 and +2 original mark sheet directorate of government examinations

+1, +2 தேர்வெழுதியவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் அக்டோபர் 14- ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "+1, +2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் அக்டோபர் 14- ஆம் தேதி முதல் வழங்கப்படும். மாணவர்கள் தங்களது பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும், அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெறலாம். தலா 600 மதிப்பெண்கள் அடிப்படையில் +1, +2 மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக தரப்படும். தேர்ச்சியடையாதவர்களுக்கு +1, +2 மார்க்கை பதிவு செய்து ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும். அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும். மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள வரும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

mark sheet +1 and +2 students schools Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe