Advertisment

நவ.23, 24-ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

tamilnadu heavy rains regional meteorological centre

"வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, மதுரை, தேனி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

நவம்பர் 23- ஆம் தேதி நாகை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

நவம்பர் 24- ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வைப்பாறு (தூத்துக்குடி)- 10 செ.மீ., சிவகாசி (விருதுநகர்), மதுரை தலா- 4 செ.மீ., சூரங்குடி (தூத்துக்குடி), அரியலூர் தலா- 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்" இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Regional Meteorological Centre heavyrains Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe