பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்குத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 13 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் முனைப்பில் போலீசார் அங்குக் குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர். இத்தகைய சூழலில் தான் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 21வது அமைச்சரவைக் கூட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி (14.08.2025) நடைபெற்றது. அதில், தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு, அவர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அவர்களது குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி செய்யப்படும். மேலும் தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு, 30 ஆயிரம் வீடுகள் அல்லது குடியிருப்புகள் கட்டித்தரப்படும். தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி, தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தூய்மைப்பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளை இலவசமாக உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த திட்டம் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திரு.வி.க. நகர், ராயபுரம் மண்டங்கலைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் இன்று (05.11.2025) மெரினா கடற்கரையில் உள்ள கடலில் இறங்கி தூய்மை பணிகளை தனியார்மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து உரிய அனுமதியின்றி கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதாகக் கூறி போலீசார் தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்து அருகில் உள்ள சமுதாயக் கூடங்களில் தூய்மை பணியாளர்கள் அடைக்கப்பட்டனர். முன்னதாக மெரினா கடற்கரைச் சாலையில் காலை 7 மணியளவில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் குழுமினர்.
அதன் பிறகு சர்வீஸ் சாலையில் அவர்கள் குழுனர். இவர்களில் முதற்கட்டமாக 50 பேரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து மற்றவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். அதே சமயம் காலை 10 மணி அளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காமராஜர் சாலை வழியாக அவரது வீட்டிலிருந்து தலைமைச்செயலகம் செல்லக்கூடிய நிலையில் அவரது வாகனத்தை மறித்து போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டதாகவும் தகவல் வெளியான நிலையில் காவல்துறையினர் அங்கு ஏராளமானோர் குவிக்கப்பட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/05/gcc-sanitation-worker-pro-arrest-marina-2025-11-05-12-39-19.jpg)