Advertisment

தூய்மை பணியாளர்கள் உண்ணாநிலை போராட்டம்;அரசு செவிசாய்க்குமா?

q1

சென்னை மாநகராட்சி கீழ் செயல்படும் தூய்மை பணியாளர்களை தனியார்யப்படுத்தும் தீர்மானத்தை கைவிடச்கோரியும், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த பணியாளரகளை பணி நிரந்தரம் செய்யப்படும் என திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தச் சொல்லி தூய்மை பணியாளர்கள் நான்கு நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Advertisment

கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. அரசு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டங்களை தனியாருக்கு தாரை வார்த்தது. அதனை எதிர்த்து எல்.டி.யூ.சி. தொழிற்சங்கம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அறிக்கையின் மூலமாக உடனடியாக 5 மண்டங்களை மட்டுமே மாநகராட்சியின் கீழ் பணிபுரிய அப்போதைய அ.தி.மு.க. அரசு உத்தரவிட்டு, தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். 

Advertisment

அதன் பிறகு தூய்மை பணியார்களுக்கு ஆதரவு கொடுத்த அதே தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் 115 மற்றும் 152 என்ற இரண்டு அரசாணையை கொண்டு வந்து. ஏற்கனவே சென்னை கோவை மாவட்டங்கள் மட்டுமே தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்கிய நிலையில், மீண்டும் சென்னையில் 5,மற்றும் 6 ஆகிய இரு மண்டங்களையும் தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மேலும் அடுத்தகட்டமாக 4 மற்றும் 8 ஆகிய இரு மண்டத்தையும் தனியார் மயமாக்கும் பணியை மாநகராட்சி செய்துவருகிறது.

தே போன்று தமிழகம் முழுவதும் தனியார் மயமாக்குதல், பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு நிச்சயம் பணி நிரந்திரம் என்ற நம்பிக்கையோடு பணி செய்து வரும் 2 லட்சம் பணியாளர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது .இது போன்று பல பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து எல்.டி.யூ.சி தொழிற்சங்கம் அரசையும், நீதிமன்றத்தை நாடி போராடி வருகிறது. அப்படி ஏற்கனவே தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க இருந்த மண்டங்களையும் போராடி தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் அடிப்படை ஊதியமாக மாதம் 19,598 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்று தற்போது வரை மாநகராட்சியின் கீழ் இயங்கும் தூய்மை பணியாளர்கள் மட்டுமே இந்த ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதே தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மற்ற மண்டங்களுக்கு இந்த ஊதியம் வழங்கப்படுவதில்லை. மாறாக 15,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் இவர்கள் வழங்கும் 15 ஆயிரத்தில் பி.எஃப் பிடித்தம் போக 12 ஆயிரம் தருவதாக சொல்லப்படுகிறது. அதிலும் பி ஃப் எடுப்பது போல கணக்கு காட்டி இந்த தனியார் நிறுவனமே எடுத்துக்கொள்கிறதாம். மேலும் விவரங்களை கேட்டால் அவர்களை வேலையில் இருக்கணுமா வேண்டாமா என்கிற மிரட்டும் தொனியில் பேசுகிறார்களாம்.

இந்த சூழ்நிலையில் தான் அப்போது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செய்த தவறை எதிர்க்கட்சியான தி.மு.க.சுட்டிக்காட்டி தனியார் நிறுவனத்திடம் கொடுப்பதை தடுத்து நிறுத்தி அரசு செயல்பட வைத்ததோ, அதே மண்டலங்களை மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்து தனியார் யமாகப்படுவது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அது மட்டுமில்லாமல் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தூய்மை பணியாளர்களுக்கு 10 வருடத்திற்கு மேலாக பணிபுரிந்தவர்களுக்கு நிரந்தப்பணி வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் அமர்ந்து 5 ஆண்டுகள் முடியும் தருவாயிலும் பணிநிரந்தரம் செய்யவில்லை, மேலும் மாறாக மீண்டும் அதிமுக போன்றே செய்து வருகிறார்கள். எனவே இனியும் பொறுத்துக் கொள்ளமாட்டோம் என்று சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள எல்.டி.யூ.சி. அலுவலகத்தின் முன்பாக ஜூலை 25 தேதி முதல் பெண் தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த உண்ணாநிலை போராட்டத்தின் போது 27.07.2025 தேதி அன்று இரவு மகாலட்சுமி உடல்நலம் குறைவால் மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டார்.

இந்த உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மகாலட்சுமி, குட்டியம்மா, ஜோதி ,வசந்தி, அஷ்ரப்பேகம் ஆகியோரிடம் கேட்ட போது நாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறோம். கொரோனா காலகட்டத்திலும், மழைக் கால கட்டத்திலும், அது எந்த காலமாக இருந்தாலும் எங்கள் பணி இந்த சமூகத்தின் வளர்ச்சியாக உள்ளது. ஆனால் நாங்கள் இன்னுமே வளர்ச்சியே அடையாமலேயே இருக்கிறோம். அதற்கான திமுக ஆட்சி வந்தவுடன் 10 ஆண்டுகளாக பணிபுரிந்தவரும் நபர்களை பணி நிரந்தரம் செய்வதாக தேர்தல் அறிக்கை சொல்லப்பட்டது. அதை நம்பித்தான் நாங்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தோம். ஆனாலும் அதை இதுநாள் வரை செய்யவில்லை, மாறாக நாங்கள் பணிபுரியும் 5,6 மண்டங்களையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். பணிநிரந்தரம் மற்றும் 5.6. மண்டங்களை தனியார் மயமாக்குதலை நிறுத்தவேண்டும் இல்லை என்றால் எங்கள் உயிர் போகும் கடைசி மூச்சு வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றனர்.

Q2

இது குறித்து பேசிய எல்.டி.யூ.சி. தொழிற்சங்க தலைவர் கு.பாரதி இந்த மக்களை வஞ்சிக்க எப்படி மனம் வருகிறது என்று தெரியவில்லை,  தமிழக முழுவதும் 2 லட்சம் தூய்மைப் பணியாளர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு 10 வருடம் மேல் பணிபுரிந்தவர்களுக்கு பணிநிரந்தரம். மேலும் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்க உள்ள 5 மற்றும் 6 மண்டங்களை மீண்டும் மாநகராட்சி கீழ் செயல்படவேண்டும். அடிப்படை ஊதியம் என அனைத்தயும் இந்த அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை இதை நாங்கள் அடையும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றார்.

contract workers dmk protest
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe