Rain alert for 8 districts Photograph: (rain)
தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெளியான அறிவிப்பின்படி நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் அதேபோல் கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளிலும் என மொத்தம் எட்டு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழைப்பொழிவு காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்மட்டம் 96.33 அடியாக உள்ளது. நீர் இருப்பு 25.9 டிஎம்சி ஆக உள்ளது. நீர்வரத்து 1904 கனஅடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1,355 கனஅடியாக உள்ளது.