தமிழகத்தில் இன்று (20/07/2025) காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெளியான அறிவிப்பின்படி தென்காசி விருதுநகர் நெல்லை கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரதான அருவி மற்றும் ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பொழிந்து வருகிறது. கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, முருக்கோடை ஆகிய பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது.
தொடர் மழைப்பொழிவு காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்மட்டம் 97.12 அடியாக உள்ளது. நீர் இருப்பு 26.5 டிஎம்சி ஆக உள்ளது. நீர்வரத்து 2,267 கனஅடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1,255 கனஅடியாக உள்ளது.