'தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் இரண்டாம் பகுதி ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் தொடங்கும் எனவும் இரண்டாம் பகுதியில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம் பொழிய வாய்ப்பு இருக்கும்' எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள அறிவிப்பின்படி ஆகஸ்ட் 5 ஆம் தேதி திருவாரூர், நாகை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (04/08/2025) இரவு 7 மணி வரை தமிழகத்தில் 28 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெளியான அறிவிப்பின்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம், விருதுநகர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.