Advertisment

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு!

cec-eci-rahul--gyananesh-kumar

பா.ஜ.க.வுக்கு ஆதரவாக  தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் ராகுல் காந்தி பல்வேறு தரவுகளுடன் இன்று (18.09.2025) செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அதில், “முதலில், இது ஹைட்ரஜன் குண்டு அல்ல. ஹைட்ரஜன் குண்டு அடுத்து வரப்போகிறது. இந்த நாட்டின் இளைஞர்களுக்கு தேர்தல்களில் எவ்வாறு மோசடி செய்யப்படுகிறது என்பதை விளக்கிக் காட்டுவதில் இது மற்றொரு மைல்கல். ஆலந்து என்பது கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதி. யாரோ ஒருவர் 6018 வாக்குகளை நீக்க முயன்றார். 2023 தேர்தலில் ஆலந்தில் நீக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை  பற்றி எங்களுக்குத் தெரியாது.

Advertisment

அவை 6,018 வாக்குகளை விட மிக அதிகம். ஆனால் அந்த 6018 வாக்குகளை நீக்கும்போது யாரோ ஒருவர் பிடிபட்டார். அதுவும் தற்செயலாகப் பிடிபட்டார். அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரி தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டிருப்பதைக் கவனித்தார். எனவே அவர் தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டது யார் என்று சரிபார்த்தார். அப்போது அந்த வாக்கை நீக்கியது பக்கத்து வீட்டுக்காரர் என்பதைக் கண்டுபிடித்தார். அவர் தனது பக்கத்து வீட்டுக்காரரிடம் இது குறித்து கேட்டார். ஆனால் நான் எந்த வாக்கையும் நீக்கவில்லை என்று சொன்னார்கள். வாக்கை நீக்க சொன்னவருக்கும், வாக்கை நீக்கியவருக்கும் எதுவும்தெரியாது என்றால் வேறு ஏதோ ஒரு சக்தி செயல்முறையை பயன்படுத்தி வாக்கை நீக்கியது. இந்திய ஜனநாயகத்தை அழித்தவர் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாத்து வருகிறார். 

இந்த மேடையில் 100 சதவீத உண்மையுடன் ஒத்துப்போகாத எதையும் நான் சொல்லப் போவதில்லை. நான் என் நாட்டை நேசிக்கும் ஒருவர். என் அரசியலமைப்பை நேசிக்கிறேன். ஜனநாயக செயல்முறையை நேசிக்கிறேன். அந்த செயல்முறையை நான் பாதுகாக்கிறேன். நீங்கள் தீர்மானிக்கக்கூடிய 100% ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இல்லாத எதையும் நான் இங்கு சொல்லப் போவதில்லை. அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இது கடந்த 10-15 ஆண்டுகளாக வாக்குத் திருட்டு நடந்து வருகிறது. இது ஒரு அமைப்பு போன்று நடைபெறுகிறது. ஜனநாயகம் கடத்தப்படுகிறது. இந்திய மக்களால் மட்டுமே ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும். வேறு யாராலும் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாது. ராகுல் காந்தி இங்கு வந்து ஏதாவது சொல்லலாம், இதுதான் உண்மை என்று சொல்லலாம். ஆனால் இந்திய மக்களால் அதைச் செய்ய முடியும். இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் மக்களைப் பாதுகாப்பதை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நிறுத்த வேண்டும். 

நாங்கள் உங்களுக்கு 100% குண்டு துளைக்காத ஆதாரத்தை இங்கே வழங்கியுள்ளோம். தொலைபேசி எண்களின் தரவுகளையும்,  ஒ.டி.பி.க்களையும் (OTP) ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். மகாராஷ்டிராவின் ராஜூராவில், 6815 இலக்கு வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். ஆலந்தில், நாங்கள்  அந்த மோசடிகளை கண்டுபிடித்தோம். ராஜூராவில், எங்களுக்கு கூடுதல் ஆதாரம் கிடைத்தது, ஆனால் அடிப்படை யோசனை ஒன்றே இதைச் செய்வதும் அதே அமைப்புதான். கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாக்குத் திருட்டு நடக்கிறது, அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது” எனத் தெரிவித்தார். 

pragyan rover Chief Election Commissioner election commission of india vote Rahul gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe