நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி (28.01.2026) காலை 11 மணியளவில் தொடங்கியது. அப்போது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். இந்த கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வான 2026-27ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று (01.02.2026) காலை 11 மணியளவில் தாக்கல் செய்து உரையாற்றினார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (02.02.2026) உரையாற்றினார். அப்போது அவர் சீனா தொடர்பான விவகாரம் குறித்த பத்திரிகை செய்தியின் மேற்கோள்களைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அதில் “இந்தியாவின் பெரும் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது” எனத் தெரித்தார். அதற்கு ஆளும் கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். ஆனாலும் ராகுல் காந்தி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ராகுல் காந்தியின் மைக் அணைக்கப்பட்டதால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டனர். இதனால் மக்களவையில் குழப்பம் நிலவியதால் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவையை ஒத்திவைத்தார்.
அதனை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்திப் பேசினார். அப்போது அவர், “எனக்குப் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. நான் 2-3 வரிகள் மட்டுமே பேச வேண்டும், இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம், இவை முன்னாள் ராணுவத் தளபதியின் வார்த்தைகள், மேலும் அவர் ராஜ்நாத் சிங் ஜி மற்றும் பிரதமர் மோடியுடன் நடத்திய உரையாடல் இது. முன்னாள் ராணுவத் தலைவர் என்ன எழுதியுள்ளார், ராஜ்நாத் சிங்கும் பிரதமர் மோடியும் அவருக்கு என்ன உத்தரவுகளை பிறப்பித்தனர் என்பதை அவையில் சொல்ல விரும்புகிறேன்.
நான் சபையில் பேச விரும்புகிறேன். அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இங்கே விஷயம் என்னவென்றால், பிரதமர் என்ன சொன்னார், ராஜ்நாத் சிங் என்ன சொன்னார் என்பதுதான். நிலம் கையகப்படுத்தப்பட்டதா இல்லையா என்பது வேறு கேள்வி.ஆனால் அதற்கு வருவதற்கு முன்பு, நாட்டின் தலைவர் வழிகாட்டுதல் வழங்க வேண்டும். நாட்டின் தலைவர் முடிவுகளை விட்டு ஓடிப்போய் முடிவுகளை மற்றவர்களின் தோள்களில் விட்டுவிடக்கூடாது. பிரதமர் அதைத்தான் செய்திருக்கிறார். இது நான் அல்ல, முன்னாள் ராணுவத் தலைவர் ஒரு புத்தகத்தில் எழுதியது இதுதான். இந்தப் புத்தகம் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. இது நலிந்து வருகிறது, இதுதான் ராணுவத் தலைவரின் பார்வை. ராணுவத் தலைவரின் பார்வையைப் பார்த்து அவர்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்? ராணுவத் தலைவர் சொல்வதைப் பார்த்து அவர்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்? அதிலிருந்து நாம் ஏதாவது கற்றுக்கொள்வோம்.
நிச்சயமாக, ஒரு பிரதமரைப் பற்றி ஏதாவது கற்றுக்கொள்வோம். ராஜ்நாத் ஜி பற்றி ஏதாவது கற்றுக்கொள்வோம். ஆனால் ராணுவத்தைப் பற்றியும், நாட்டின் அரசியல் தலைமையால் அது எவ்வாறு ஏமாற்றப்பட்டது என்பதையும் கற்றுக்கொள்வோம். நரவனே தனது புத்தகத்தில் பிரதமர் மற்றும் ராஜ்நாத் சிங் ஜி பற்றி தெளிவாக எழுதியுள்ளார் என்று நான் சொல்கிறேன். அது ஒரு கட்டுரையில் வெளிவந்துள்ளது. நான் கட்டுரையை மேற்கோள் காட்டுகிறேன். அவர்கள் என்னைப் பேச விடவில்லை, அது வெளிவந்தால், நரேந்திர மோடி மற்றும் ராஜ்நாத் சிங்கின் யதார்த்தம் மக்களுக்கு வெளிப்படும், சீனா நம்மை எதிர்த்து நின்று முன்னேறியபோது 56 அங்குல மார்புக்கு என்ன ஆனது என்பது அவர்களுக்குப் புரியும் என்பதால் அவர்கள் பயப்படுகிறார்கள்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/02/rahulparl-2026-02-02-18-36-14.jpg)