தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் வரவுள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த தேர்தலோடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் உட்பட யூனியன் பிரதேசமாக இருக்கக்கூடிய புதுச்சேரி மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் 11ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். லாஸ்பேட்டையின் விமான நிலைய மைதானத்தில் நடைபெறும் மாநாட்டில், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினுடைய தலைவரும் புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி பங்கேற்கவுள்ளார். இந்த மாநாட்டில் புதுச்சேரியில் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள லாட்டரி தொழிலதிபர் மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடைய லட்சிய ஜனநாயகக் கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/02/modisea-2026-02-02-20-07-24.jpg)