Advertisment

நாளையும் பொங்கல் தொகுப்பு விநியோகம் -அரசு அறிவிப்பு

620

Pongal package for those who are released tomorrow - Government announcement Photograph: (tn govt)

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

Advertisment

2026ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு அதன்படி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

Advertisment

இதன்மூலம் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர் என அறிவிக்கப்பட்டு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விடுபட்டவர்களுக்கு நாளையும் (14/01/2026) பொங்கல் தொகுப்பு மற்றும் பணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

announced tn cm dmk. mk.stalin pongal celebraion tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe