Skip to main content

மோசமான தேர்தல் முறைகேடு நடந்துள்ளது! - எடியூரப்பா குற்றச்சாட்டு

Published on 22/05/2018 | Edited on 22/05/2018

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மிக மோசமான தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளதாக எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
 

yeddy

 

கர்நாடக சட்டசபைத் தேர்தல் பல்வேறு திருப்பங்களுடன் நிறைவடைந்து, நாளை அம்மாநில முதல்வராக குமாரசாமி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், நேற்று விஜயபூரா மாவட்டம் மனகுலி கிராமத்தில் வி.வி.பி.ஏ.டி. எனப்படும் வாக்கு எந்திரத்துடன் தொடர்புடைய 8 எந்திரங்கள் கேட்பாரற்று கிடைத்துள்ளன. 
 

சர்ச்சைக்குரிய விதத்தில் கைப்பற்றப்பட்ட இந்த எந்திரங்கள், விஜயபூரா மாவட்டத்தைச் சேர்ந்தவை இல்லை என்றும், அவை செயலற்ற நிலையில் கிடைத்ததாகவும் தேர்தல் அதிகாரிகள் விளக்கமளித்திருந்தனர். தேர்தல் விதிமுறைகள் குறித்த குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக, இந்த இயந்திரங்களை இங்கு கொண்டுவந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
 

இதுகுறித்து, பா.ஜ.க. முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட எடியூரப்பா, தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘விஜயபூரா மாவட்டம் மனகுலி கிராமத்தில் கேட்பாரற்றுக் கிடந்த வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாகவே நம் நம்புகிறேன். இதுபோன்ற எந்திரங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது மிக மோசமான முறையில் தேர்தல் முறைகேடுகள் நடந்திருப்பதையே சுட்டிக்காட்டுகின்றன. இதுபோன்ற மோசடிகள் நடப்பதும், அதுகுறித்து புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதததும் இது முதல்முறை அல்ல. நாங்கள் பலமுறை புகார்கள் வழங்கியிருக்கிறோம். ஆனால், எல்லாமே வீணாகித்தான் போனது’ என எழுதியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.