தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என பரபரப்பாக இயங்கி வருகின்றன.இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,''மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம். ஓர் அட்டையில் “எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என எழுதி வாசலில் மாட்டுங்கள். நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும்'' என பதிவிட்டுள்ளார்.
''இதை எழுதி வீட்டு வாசலில் மாட்டுங்கள்''- வேண்டுகோள் விடுத்த கமல்!
Advertisment