Skip to main content

''தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் எந்த அரசியல் தலைவராவது இப்படி பேசி இருப்பாரா?'' - எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம்

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

"Would any political leader in the political history of Tamil Nadu have spoken like this? ''-MP Su. Venkatesan condemned

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தான் பேசும் வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் பேசும் சு.வெங்கடேசன், ''பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பொதுவெளியில் பேசுகிறார், ‘உங்கள் கையில் துப்பாக்கி இருக்கிறது. துப்பாக்கியில் தோட்டா இருக்கிறது. உத்தரவு கொடுக்க மோடி இருக்கிறார். சுட்டுத் தள்ளுங்கள். உங்களைக் காப்பாற்ற தமிழக பாஜக இருக்கிறது.’ என்று. நீங்கள் யோசித்துப் பாருங்கள், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் எந்த அரசியல் தலைவராவது இப்படிப் பேசி இருப்பாரா? சட்ட ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும்; சமூக அமைதி காப்பாற்றப்பட வேண்டும்; மக்களின் வாழ்நிலை காப்பாற்றப்பட வேண்டும் என்றுதான் இதுவரை தமிழ்நாட்டினுடைய அரசியல் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள்.

 

முதல் முறையாக ஒரு கட்சியினுடைய மாநிலத் தலைவர் பொதுநிகழ்வில் உங்கள் கையில் துப்பாக்கி இருக்கிறது, துப்பாக்கியில் தோட்டா இருக்கிறது, உத்தரவு கொடுக்க மோடி இருக்கிறார். சுட்டுத் தள்ளிவிட்டு வாருங்கள். பாஜக உங்களைப் பாதுகாக்கும் என்று அண்ணாமலை பேசுகிறார். அவர் மட்டும் இதைப் பேசவில்லை. இதே வசனத்தை டெல்லியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பேசினார். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆறு மாதங்களுக்கு முன்பு இதே வசனத்தை மத்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசினார். சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கலவரம் அது. பலர் உயிரிழந்தார்கள். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருட்கள் சேதாரமானது.

 

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாங்கள் கேள்வி எழுப்பினோம். ஒன்றிய அமைச்சர் இப்படி பேசலாமா? இது சரியா? என்று கேள்வி கேட்டோம். உடனடியாக மோடி நடவடிக்கை எடுத்தார். என்ன நடவடிக்கை எடுத்தார் தெரியுமா? சுட்டுத் தள்ளுங்கள் என்று பேசிய ஒருவர் ஒன்றிய இணை அமைச்சராக இருப்பது தேசத்திற்கு அவமானம். இனிமேல் அவர் கேபினட் அமைச்சராக மாறுவார் என்று, இணை அமைச்சராக இருந்த அனுராக் தாக்கூரை அமைச்சராக மாற்றினார் மோடி. சுட்டுத் தள்ளுவோம் என்று பேசினால்; வன்முறையை தூண்டினால்; கலவரத்தை உருவாக்கினால் அவர்களைப் பாதுகாக்க மோடி இருக்கிறார்'' எனப் பேசியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.