Skip to main content

மூத்த அமைச்சர்களின் எதிர்பார்ப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?

Published on 11/05/2021 | Edited on 11/05/2021

 

Will Tamil Nadu Chief Minister Stalin live up to the expectations of senior ministers?

 

2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் மிக பரபரப்பாக நடந்து முடிந்து, புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்று பல்வேறு ஆக்கப் பணிகளை செய்ய துவங்கியுள்ள நிலையில், தற்போது திமுக அமைச்சரவையில் உள்ள ஒரு சில மூத்த நிர்வாகிகள் தாங்கள் எதிர்பார்த்த துறை தங்களுக்குக் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

 

அதில், திருச்சியில் 9 சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றி மாபெரும் வெற்றியைத் தேடித் தந்த அமைச்சர் கே.என். நேரு, அவர் எதிர்பார்த்திருந்த உள்ளாட்சித் துறையில் நகர்புறம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இரண்டும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அந்தத் துறையை இரண்டாகப் பிரித்து நகர்ப்புற வளர்ச்சியை நேருவுக்கும் ஊரக வளர்ச்சித் துறையை அமைச்சர் பெரியகருப்பனுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்துள்ளார்.

 

dmk

 

என்னளவில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த திமுக நிர்வாகிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் அவருக்கு சால்வை அணிவிக்கச் சென்றபோது, “என்ன பெரிய அமைச்சர் பதவி கொடுத்துட்டாங்க. நான் எதிர்பார்த்த ஊரக வளர்ச்சித் துறை என்கிட்ட இல்லை” என்று தன்னுடைய சலிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

 

ஏற்கனவே திமுகவின் மூத்த உறுப்பினரான துரைமுருகன், அவர் தன்னுடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியதால் அவருக்கு கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை வழங்கப்பட்டு அவரை திமுக தலைமை சரி செய்திருக்கிறது. கே.என். நேருவின் எதிர்பார்ப்பைக் கூடுதல் பொறுப்பு கொடுத்து சரி செய்ய நிர்வாகிகள் ஆலோசனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

dmk

 

அதேபோல் திண்டுக்கல்லில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெற்ற ஐ. பெரியசாமிக்கு கூட்டுறவு துறையை மட்டும் கொடுத்துள்ளதாக திமுக மூத்த நிர்வாகிகள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். இவருக்கும் கூடுதல் துறையை ஒதுக்க நிர்வாகிகள் தலைமையிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

 

தற்போது இந்த மூத்த அமைச்சர்களின் எதிர்பார்ப்பை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நிறைவேற்றுவாரா என்று தொண்டர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.