Skip to main content

மூத்த அமைச்சர்களின் எதிர்பார்ப்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவாரா?

Published on 11/05/2021 | Edited on 11/05/2021

 

Will Tamil Nadu Chief Minister Stalin live up to the expectations of senior ministers?

 

2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் மிக பரபரப்பாக நடந்து முடிந்து, புதிய அமைச்சரவையும் பொறுப்பேற்று பல்வேறு ஆக்கப் பணிகளை செய்ய துவங்கியுள்ள நிலையில், தற்போது திமுக அமைச்சரவையில் உள்ள ஒரு சில மூத்த நிர்வாகிகள் தாங்கள் எதிர்பார்த்த துறை தங்களுக்குக் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

 

அதில், திருச்சியில் 9 சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றி மாபெரும் வெற்றியைத் தேடித் தந்த அமைச்சர் கே.என். நேரு, அவர் எதிர்பார்த்திருந்த உள்ளாட்சித் துறையில் நகர்புறம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இரண்டும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அந்தத் துறையை இரண்டாகப் பிரித்து நகர்ப்புற வளர்ச்சியை நேருவுக்கும் ஊரக வளர்ச்சித் துறையை அமைச்சர் பெரியகருப்பனுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்துள்ளார்.

 

dmk

 

என்னளவில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த திமுக நிர்வாகிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் அவருக்கு சால்வை அணிவிக்கச் சென்றபோது, “என்ன பெரிய அமைச்சர் பதவி கொடுத்துட்டாங்க. நான் எதிர்பார்த்த ஊரக வளர்ச்சித் துறை என்கிட்ட இல்லை” என்று தன்னுடைய சலிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

 

ஏற்கனவே திமுகவின் மூத்த உறுப்பினரான துரைமுருகன், அவர் தன்னுடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியதால் அவருக்கு கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை வழங்கப்பட்டு அவரை திமுக தலைமை சரி செய்திருக்கிறது. கே.என். நேருவின் எதிர்பார்ப்பைக் கூடுதல் பொறுப்பு கொடுத்து சரி செய்ய நிர்வாகிகள் ஆலோசனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

dmk

 

அதேபோல் திண்டுக்கல்லில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெற்ற ஐ. பெரியசாமிக்கு கூட்டுறவு துறையை மட்டும் கொடுத்துள்ளதாக திமுக மூத்த நிர்வாகிகள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். இவருக்கும் கூடுதல் துறையை ஒதுக்க நிர்வாகிகள் தலைமையிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

 

தற்போது இந்த மூத்த அமைச்சர்களின் எதிர்பார்ப்பை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நிறைவேற்றுவாரா என்று தொண்டர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.