Skip to main content

ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றமா..?

Published on 02/05/2021 | Edited on 02/05/2021
Will IPS officers change?

 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் மாற்றப்படவிருக்கிறார்கள். தமிழக டிஜிபியாக இருக்கும் திரிபாதி நடப்பு மாதத்தோடு ஓய்வு பெறுகிறார். இதனால் புதிய டி.ஜி.பி.யார் ? என்கிற விவாதம் ஐ.பி.எஸ். அதிகாரிகளிடத்தில் எதிரொலிக்கிறது. இது குறித்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “டி.ஜி.பி. அந்தஸ்தில் 1987 ஆம் வருட பேட்ஜில் சைலேந்திரபாபு, கரன்சின்கா, பிரதீப்  பிலிப் , 1988 ஆம் வருட பேட்ஜில் சஞ்சய் அரோரா, சுனில்குமார்சிங், 1989 ஆம் வருட பேட்ஜில் கந்தசாமி, ஷகில் அக்தர், ராஜேஷ்தாஸ், பி.கே.ரவி ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் பாலியல் குற்றச்சாட்டுகளில் ராஜேஷ்தாஸ் சிக்கி அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

 

இந்த 9 அதிகாரிகளின் பட்டியல் மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்களில் சீனியாரிட்டிபடி மூன்று பேரை தேர்வு செய்து தமிழக அரசிடம் தேர்வாணையம் ஒப்படைக்கும். அவர்களில் ஒருவரை ஸ்டாலின் தேர்வு செய்வார்” என்கின்றனர். மேலும்,  தமிழக அரசின் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் டிஜிபியாக அதாவது தமிழக காவல்துறையின் தலைவராக நியமிக்கப்படுபவர் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரியாக இருக்க வேண்டும், வட இந்திய அதிகாரிகளுக்கு வாய்ப்பு தந்து விடாதீர்கள் என இப்போதே ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலர், பல ரூட்டுகளில் ஸ்டாலினுக்கு தகவல அனுப்பி வைத்துள்ளனர். அதேசமயம், திமுக ஆட்சியில் எப்போதும் சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சனங்கள் வைக்கப்படும் என்பதால், தமிழக அதிகாரியாக இருந்தாலும் சரி, வட இந்திய அதிகாரியாக இருந்தாலும் சரி இதுவரை பாலியல் குற்றச்சாட்டுகள், ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத நேர்மையான அதிகாரியை நியமியுங்கள் என வேண்டுக்கொள் வைத்து வருகின்றனர்.

 

மேலும் அதுதான் உங்கள் ஆட்சிக்கு நல்லப்பெயரை பெற்றுத் தரும் என்று ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலர் ஸ்டாலினுக்கு தகவல் அனுப்பி வைத்தபடி இருக்கின்றனர். அதேபோல, அதிமுக ஆட்சியில் அமைச்சர்களுக்கு பொட்டித் தூக்கி சேவகம் செய்து வந்த அதிகாரிகளும் மீண்டும் நல்ல பதவியை கைப்பற்ற திமுகவின் சித்தரஞ்சன் சாலையை நெருங்கி வருகிறார்கள். அதற்காக தூதுவிட்டு கொண்டும் இருக்கின்றனர். அதனால், ‘உயரதிகாரிகள் நியமணத்தில் ஸ்டாலின் கவனமாக இருக்க வேண்டும்’ என்று விவரிக்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.