Skip to main content

எடப்பாடியை சசிகலா முதல்வராக்கியது ஏன் தெரியுமா?

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சியை யார் வழி நடத்துவது தலைமை ஏற்பது என்ற நிலையில் சசிகலா அதிமுகவின் பொது செயலாளராக அறிவிக்கப்பட்டார்.பின்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு,பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பு நிலை என்று அதிமுக கடும் பிரச்சனைகளை சந்தித்தது.இது குறித்து தினகரன் பேசும் போது  கொங்கு மண்டலம் அதாவது மேற்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுத்தால் துரோகம் செய்யமாட்டார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அனைவரும் ஒரு மனதாக தேர்ந்து எடுத்தோம். இல்லையென்றால் சிறை செல்லும் முன் சசிகலா என்னை முதல்வராக்கி இருப்பார் என்று டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

 

sasikala



தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  கோவை சூலூர் தொகுதியில் அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து டிடிவி.தினகரன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறும் போது  முதல்வர் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்தார். கொங்கு மண்டலத்தை சேர்ந்த மக்கள், எப்போதும் துரோகக் கூட்டத்திற்கு துணை நிற்க மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓபிஎஸ் முதல்வராக தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவர் பாஜகவின் ஏஜென்டாகவே செயல்பட்டு வந்தார்.

 

ttv



அதன்பிறகு தான் கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்கட்டும் என்று எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினோம். சிறைக்குச் செல்லும் முன்பு கூட சசிகலா நினைத்திருந்தால் என்னை முதல்வராகத் தேர்வு செய்திருக்க முடியும். ஆனால் நாங்கள் பதவிக்கு ஆசைப்படுவர்கள் அல்ல என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி நான்கு கால் பிராணி போல எப்படி தவழ்ந்து வந்து பொதுச்செயலாளர் சசிகலா காலில் விழுந்தார் என்பது எல்லோரும் பார்த்து இருப்பீர்கள். முதல்வராக வேண்டும் என்று ஆசை இருக்கலாம். ஆனால் பதவி வெறி இருக்கக்கூடாது. முதல்வர் எடப்பாடியின் பதவி வெறியால் தான் தமிழ்நாட்டில் 22 தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் வந்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தீர்மானித்து, குஜராத்தின் மோடியா? அல்லது தமிழகத்தின் லேடியா? என்று சவால்விட்டார். ஜெயலலிதா யாருடன் இனி கூட்டணி கிடையாது என்று கூறினாரோ அவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அதிமுக என்ற மாபெரும் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டு பயந்து, நடுங்கி வருகின்றனர் என டிடிவி.தினகரன் பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.