Skip to main content

இதுவும் உங்கள் சாதனைதானே. அதை ஏன் பேசுவதில்லை? சீமான் கேள்வி

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

 

சிதம்பரம் (அரியலூர்) நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
 

அப்போது, அனைத்து உயிர்களுக்குமான தேவையும், அதனை நிறைவு செய்யும் சேவையும்தான் அரசியல் என்ற புரிதலோடு இந்த களத்திலே இந்த புனித பயணத்தை தொடருகிறோம். ஒரு தூய ஆட்சியை இந்த நாட்டிற்கு தர வேண்டும் என்பதால்தான் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தனித்து நிற்கிறது. இந்த கொள்ளைக்கூட்டத்தினரோடு கூட்டணி வைக்கவில்லை.

 

seeman


நமக்கு இவர்கள் என்ன தந்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டு காலத்தில் மீள முடியாத வறுமையை தந்திருக்கிறார்கள். அந்த வறுமையின் குழந்தையாக இருக்கக்கூடிய அறியாமை. அறியாமையின் குழந்தையாக நம்மிடையே இருக்கின்ற மறதி. இந்த மூன்றையும் பல ஆண்டுகளாக முதலீடாக வைத்து அரசியல் செய்கிறார்கள். கூட்டணி வைத்திருக்கின்ற ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு கட்சியையும் எவ்வளவு தாக்கி கடந்த காலத்தில் பேசினார்கள். இன்றைக்கு எல்லாவற்றையும் மறந்துவிட்டு கூட்டணி அமைக்கிறார்கள். இது கொள்கைக்காக வைத்திருக்கின்ற கூட்டணி அல்ல. இது வெறும் நோட்டணி, நோட்டுக்காக வைத்திருக்கின்ற சீட்டனி. இது தமிழ்நாட்டிற்கு பிடித்திருக்கின்ற சனி, பினி. இதனை மாற்ற வேண்டும்.

 

இவர்கள் சாதனை என்பது மிக்சி, பேன், கிரைண்டர், சைக்கிள் கொடுத்தோம் என்று சொல்லுகிறார்கள். இது ஒரு குடும்பத்தின் அடிப்படை தேவை. ஒரு குடும்பத்தின் அடிப்படை தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியாத அளவுக்கு வைத்திருந்ததுதான் இவர்கள் செய்த சாதனை. கலைஞர் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று கொண்டுவந்தார். பிறகு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று கொண்டு வந்தார். இந்த அளவுக்கு மக்களை வறுமைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அடுத்து ஒரு அறிவிப்பு வருகிறது இலவச அரிசி என்று. ஏன் இந்த மக்களை வக்கத்துப்போனவர்களாக மாற்றிவிட்டார்கள். இதுதான் யதார்த்த நிலை. ஆனாலும் இவர்கள் சொல்லுவார்கள் சாதனை, சாதனை என்று. 
 

தாலிக்கு தங்கம் என்று சொன்னார்கள். அரை பவுன் தங்கத்தைக்கூட தன் மகளுக்கு வாங்கிக்கொடுக்க முடியாத நிலைக்கு இந்த மக்களை இவர்கள் தள்ளிவிட்டார்கள். அரை பவுன் தங்கம் கொடுத்து சாதனை என்று சொல்லுகிறீர்கள். குடிக்க வைத்து இரண்டு லட்சம் பேரின் தாலியை அறுத்துள்ளீர்களே இதுவும் உங்கள் சாதனைதானே. அதை ஏன் பேசுவதில்லை. 

 

கல்வியை தனியார் இடத்தில் கொடுத்தது அரசு. காசு உள்ளவன் தனியார் பள்ளியில், கல்லூரியில் படிக்கலாம். காசு இல்லாதவன் பள்ளி, கல்லூரியை வேடிக்கை பார்த்துவிட்டு போகலாம். இதுதான் நிலைமை. இந்த நாட்டு மக்களுக்கு தரமான மருத்துவத்தை இந்த அரசால் தர முடியவில்லை. ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் அரசு மருத்துவமனைக்கு செல்லவில்லை. அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். அரசு மருத்துவமனைக்கு செல்லவில்லை, தனியார் மருத்துவமனைக்கு சென்றார். கலைஞர் அரசு மருத்துவமனைக்கு செல்லவில்லை இராமச்சந்திரா, காவேரி மருத்துவமனைக்கு சென்றார். ஏன் அரசு மருத்துவமனைக்கு இவர்கள் செல்லவில்லை. தரமாக இல்லை. ஏன் இந்த கேள்வியை மக்கள் எழுப்பவில்லை.

 

seeman



ஆறாயிரம் ரூபாய் வங்கியில் போடுவதாக மோடி சொல்லுகிறார். கடந்த ஐந்து வருடத்தில் இதனை போட்டு முடித்திருக்கலாமே. அது ஏன் இந்த மாதம் தேர்தல் வரும்போது போன மாதம் போடுகிறீர்கள். ஓட்டுக்கு காசு. அதிலும் இரண்டாயிரம் போட்டுவிட்டு, நான்காயிரம் பாக்கி ஏன்? ஓட்டுப் போடுங்க தருகிறேன் என்றுதான் அர்த்தம். நம்மை கூலிக்கு மாறடிக்கிற கூட்டமாக்கிட்டாங்க. இங்க ராகுல்காந்தி 72 ஆயிரம் தருகிறேன். ஏன் என்று கேட்டால் ஏழைகளாகிவிட்டார்கள் என்கிறார். காங்கிரஸ் கட்சியால்தான் இந்த மக்கள் ஏழையானது. இவ்வாறு பேசினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.